அதிஷ்டம் வந்தால், கிள்ளி கொடுக்காது அள்ளி கொடுக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் பிரியா பவானி ஷங்கர். தனியார் தொலைக்காட்சியில் 12,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்து... இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து நடிகர் கார்த்தி, இயக்குனர் பாண்டி ராஜ் இயக்கத்தில் நடித்த 'கடைக்குட்டி சிங்கம்', படத்தில் கிராமத்து பெண் ரோலில் நடித்தார். பின்னர் 'மான்ஸ்டர்', 'ஹாஸ்டல்', 'ஓ மணப்பெண்ணே', 'ருத்ரன்'. 'மாஃபியா', என பல படங்களில் நடிக்க துவங்கினார். தற்போது இவர் நடித்து முடித்துள்ள இந்தியன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
சமூக வலைத்தளத்திலும் படு ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், தற்போது பாவாடை சட்டையோடு இருக்கும் குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை வெளியிட... அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் அடையாளமே தெரியவில்லை என தங்களின் கருத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.