Asianet News TamilAsianet News Tamil

பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி... கர்நாடகாவில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

கர்நாடகாவில் பிரதமர் மோடி பேரணியில் இளைஞர் ஒருவர் புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவில் பிரதமர் மோடி பேரணியில் இளைஞர் ஒருவர் புகுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 26 ஆவது தேசிய இளைஞர் விழா இன்று முதல் (ஜன.12) முதல் 16 வரை நடைபெறுகிறது. ஹூப்ளி மற்றும் தார்வாட் இரட்டை நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவை தொடங்கி வைக்க வருகை தந்த பிரதமர் மோடி, விழா நடைபெறும் தனது வாகனத்தில் சென்றார்.

இதையும் படிங்க: ஹூண்டாய் சிஓஓ தருண் கர்க்குடன் ஏசியாநெட் சிறப்பு நேர்காணல்

அப்போது பொதுமக்களை பார்த்து கையசைத்தப்படி பேரணியாக சென்றார். அப்போது ஒரு இளைஞர் திடீரென்று அனைத்து பாதுகாப்பையும் மீறி பிரதமரின் கார் அருகே சென்று பிரதமர் மோடிக்கு மாலை அணிவிக்க முற்பட்டார். அப்போது பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இதையும் படிங்க: இலவச பேருந்தால் வாழ்வாதாரம் பாதிப்பு; மினி பஸ் ஓட்டுநர்கள் மனு

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் கூறுகையில், பிரதமரின் பாதுகாப்பில் எந்த குறையும் இல்லை என்றார். ஆனால் சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், ஒரு இளைஞன் பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் மோடியின் காரை நெருங்கியதை காணலாம். 

Video Top Stories