குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த விவகாரம்… கண்டனம் தெரிவித்து போராட்டத்தை அறிவித்த திருமா!!
ஆதி திராவிடர் குடியிருக்கும் பகுதியில் உள்ள நீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தை எதிர்த்து நாளை புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆதி திராவிடர் குடியிருக்கும் பகுதியில் உள்ள நீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தை எதிர்த்து நாளை புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் ஆதி திராவிடர் குடியிருக்கும் பகுதியில் உள்ள நீர் தொட்டியில் மனித கழிவை கலந்து இருக்கிறார்கள். காட்டுமிராண்டித்தனமான செயல்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் தாயார் மறைவு..! முதல் ஆளாக குஜராத்திற்கு பறந்தார் ஓபிஎஸ்
இழிவான இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். நீண்ட காலமாக அந்த பகுதியில் தலித் மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பகுதி மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை துணிச்சலானது. பாராட்டு கூறியது. இந்த சம்பவம் குறித்து நாளை எனது தலைமையில் புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: விவசாயிகளை ஏமாற்றும் திமுக.. தேர்தல் வாக்குறுதி என்னாச்சு.? டென்ஷனான டிடிவி தினகரன் !
புதுக்கோட்டை தண்ணீர் தொட்டியில் கழிவு கலந்திருப்பது தொடர்பாக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இது போன்ற செயல்களை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த சுதந்திரம் இருப்பதால்தான் துணிச்சலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.