பாஜக நிர்வாகியின் கார் மீது கல்வீச்சு… கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள்!!
பெரம்பலூர் அருகே பாஜக நிர்வாகியின் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி காண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
பெரம்பலூர் அருகே பாஜக நிர்வாகியின் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி காண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். பெரம்பலூர் திருவாதிரை டோல்கேட் அருகே பாஜக மாநில பட்டியலணி தலைவராக இருப்பவர் தடா பெரியசாமி. இவரது வீட்டிற்கு முன்னாள் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: Exclusive பிரதமர் அணிந்து வந்தது இன்ப அதிர்ச்சி: மோடிக்கு ஜாக்கெட் தயாரித்த கரூர் செந்தில் சங்கருடன் நேர்காணல்
மேலும் காரின் முன்பக்கம் மற்றும் பின் பக்கங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதை அடுத்து ஆட்கள் வருவதை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு மர்ம நபர்களை பிடிக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு விஸ்வஹிந்து பரிஷத் நினைவு அஞ்சலி