Asianet News TamilAsianet News Tamil

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு.. ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைப்பு - நீதிபதி அப்துல் காதர் உத்தரவு!

Kodanad Case : கொடநாடு கொலை, வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் உத்தரவு.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜ், ஜித்தன் ஜாய் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர். இதேபோல் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் சிபிசிஐடி போலீசார் ஆஜராகினர். அதேபோல் எதிர் தரப்பு வழக்கறிஞர் விஜயன் ஆஜராகினர்.

கொடநாடு கொலை, கொள்ளை நடைபெற்ற பங்களாவில் நேற்று சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் மாதவன் தலைமையில் மூன்று துணை காண்காணிப்பாளர்கள், தடவியல் நிபுணர்கள் உட்பட 15பேர் கொண்ட குழுவினர் மூன்று மணி நேரத்திற்கு மேல் கொள்ளை சம்பவம்  நடைபெற்ற அறைகள் மற்றும் பங்களாவிலும் கொலை சம்பவம் நடைபெற்ற நுழைவாயிலிலும் ஆய்வு மேற்கொண்டனர். 

இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக கூடுதல் சாட்சிகளிடையே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதால் கால அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்திரவிட்டார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், கொடநாடு கொலை கொள்ளை வழக்குவழக்கின் தற்போதைய விவரங்களை கேட்டறிந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்திருந்த மனு மீதான அரசு தரப்பு தரப்பில் பதில் கூறும் போது நீதிபதி வழக்கு சம்பந்தப்பட்ட இடங்களை எப்பொழுது வேண்டுமானாலும் பார்வையிடலாம் எனவும், சட்டபூர்வமாக அவருக்கு முழு உரிமையும் அதிகாரமும் இருக்கிறது, மேலும் வழக்கு புழன் விசாரணையில் மற்றவர்கள் தலையிடுவதால் விசாரணை பாதிக்கப்படும் என்று அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டதால் இதனைக் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும் நேற்று கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி மற்றும் தடவியில் நிபுணர்கள் கொண்ட 15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தது குறித்த எவ்வித அறிக்கையும் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை எனும் அவர் தெரிவித்தார்.

Video Top Stories