Asianet News TamilAsianet News Tamil

கோவை மேயர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் காலி குடங்களுடன் போராட்டம்

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டத்திற்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் போராட்டம்!

கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு முன்னர் அதிமுக கவுன்சிலர்கள் 38 வது வார்டு ஷர்மிளா, 47 வது வார்டு பிரபாகரன், 90 வது வார்டு ரமேஸ் ஆகியோர் மாநகராட்சி கூட்டம் நடைபெறும் விக்டோரியா மஹால் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காலி குடங்களுடன் கோவை மாநகராட்சியில் சரிவர குடிநீர் வராததை கண்டித்தும், மேயர் கல்பனா தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

Video Top Stories