Asianet News TamilAsianet News Tamil

காதலியை நண்பர்களுடன் சேர்ந்து தொடர்ந்து கற்பழித்த இளைஞர்! குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பெண்ணை சீரழித்த அரக்கர்கள்...

The young man who raped her again with her boyfriend
The young man who raped her again with her boyfriend
Author
First Published May 5, 2018, 5:04 PM IST


கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண்ணை கத்தி முனையில் மிரட்டி தொடர் கூட்டு பலாத்காரம் செய்தத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியை சேர்ந்த இளம்பெண். இவர் கணவனால் கைவிடபட்டவர். தனது தாத்தாவின் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு வாய்பேசமுடியாத தனது தாயுடன் வந்துள்ளார். அப்போது பக்கத்து படுக்கையில் இருந்த நோயாளியின் மகனான நைவின்மாலிக் இந்த பெண்ணுக்கு உதவி செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது, இந்தக் காதலால் அடிக்கடி இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டு காதலை வளர்த்துள்ளனர்.

இந்நிலையில் நைவின்மாலிக் அந்த பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தையில் பேசி கடந்த 29-ஆம் தேதி சேலத்துக்கு வரவழைத்த அவர் அன்று முழுவதுமாக முழுவதும் அண்ணா பூங்கா, குரும்பப்பட்டி வன உயிரியல்பூங்கா மற்றும் ஏற்காட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது நைவின்மாலிக் தனது சகோதரர் நவீஸ் மற்றும் நண்பர் ரஞ்சித் ஆகியோரை அறிமுகப்படுத்தியுள்ளார். அன்றைய தினம் இரவு சேலம் சத்திரம் பகுதியில் உள்ள லாட்ஜில் ரூம் எடுத்து இருவரும் தங்கியுள்ளனர்.

அப்போது நைவின்மாலிக் குளிர்பானத்தில் மதுவை கலந்து அந்த பெண்ணுக்கு கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அதன்பிறகு மதுபோதையில் இருந்த அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நைவின்மாலிக் பின்னர் தனது சகோதரர் நவீஸ் மற்றும் ரஞ்சித் ஆகியோரையும் போன செய்து அழைத்துள்ளார்.

அவர்களும் அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். வலி தாங்க முடியாமல் அழுத பெண்ணை அடித்து கத்தி முனையில் மிரட்டி தொடர் பலாத்காரம் செய்ததுள்ளனர். இதனையடுத்து அப்பெண்ணின் ஏடிஎம் அட்டையை கொண்டு அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.30 ஆயிரம் பணத்தையும் எடுத்து கொண்டு நடந்தவற்றை போலீஸிடம் கூறக் கூடாது, அப்படி செய்தால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்ல, தாங்கள் எப்போது அழைத்தாலும் வரவேண்டுமென மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் நடந்ததை தெரிவித்துவிட்டு, நேற்று சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நைவின்மாலிக், நவீஸ் மற்றும் ரஞ்சித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios