05:55 PM (IST) Oct 20

bharathi kannamma : பாரதி கூறிய உண்மையால் விபரீத முடிவெடுக்கும் ஹேமா..புது திட்டம் போடும் வெண்பா

திருமணத்தின் போது மண்டபத்தை விட்டு வெளியேறி எனக்கு பிடித்த பாரதியை திருமணம் செய்து கொள்வேன் என புதிய திட்டம் ஒன்றை தீட்டி விடுகிறார்.

bharathi kannamma : பாரதி கூறிய உண்மையால் விபரீத முடிவெடுக்கும் ஹேமா..புது திட்டம் போடும் வெண்பா

05:53 PM (IST) Oct 20

முடியால் சிக்கிய சந்தியா..ஒருபுறம் மாமியார்..ஒருபுறம் அதிகாரி...ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்

அடுத்ததாக சந்தியாவுக்கு மல்டி டாஸ்க் போட்டி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட, அந்த நேரத்தில் சந்தியா மயங்கி விழுகிறார்.

முடியால் சிக்கிய சந்தியா..ஒருபுறம் மாமியார்..ஒருபுறம் அதிகாரி...ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்

05:50 PM (IST) Oct 20

baakiyalakshmi : ஒருவழியாக முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி மகா சங்கமம்..இன்றைய எபிசோட்

செழியன் உணவு வாங்கி வருவதை பார்த்த எழில் பாக்யாவிடம் இதைக் கூறுகிறார். இதனால் ஜெனி பாக்யாவிடம் மாட்டிக் கொள்கிறார்.

baakiyalakshmi : ஒருவழியாக முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி மகா சங்கமம்..இன்றைய எபிசோட்

01:24 PM (IST) Oct 20

பயிர்களுக்கு வெறும் ரூ.50 தான் இழப்பீட்டு தொகையா..? விவசாயிகளை சுரண்டும் காப்பீட்டு நிறுவனம்- ராமதாஸ் ஆவேசம்

முழுமையாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.30,000 இழப்பீடாக வழங்கப் பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு விவசாயிக்கும் அவர்களின் சர்வே எண் அடிப்படையில் ரூ.35, ரூ.50, ரூ.66, ரூ.88 என்ற அளவில் தான் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க..


11:42 AM (IST) Oct 20

முக்கிய அங்கத்தை முடிவு செய்த ஜெயிலர் படக்குழு...என்ன விஷயம் தெரியுமா?

ஜெயிலர் பட குழு தற்போது கலை இயக்குனரையும் முடிவு செய்துள்ளது. பிரபல கலை இயக்குனரான கிரன் தான் இந்த படத்திற்காக பணிபுரிய உள்ளார்.

முக்கிய அங்கத்தை முடிவு செய்த ஜெயிலர் படக்குழு...என்ன விஷயம் தெரியுமா?

11:03 AM (IST) Oct 20

சாலைகளில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

சாலைகளில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் மற்றும் இதர அவரசகால வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

10:53 AM (IST) Oct 20

தென்மாவட்ட மக்களுக்கு குட்நியூஸ்.. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் ரயில்களில் டிக்கெட் விரைவாக விற்றுத் தீர்ந்தது. தற்போது பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செல்லவும் ஏராளமானோர் முண்டியடித்துக்கொண்டு முன்பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க

09:52 AM (IST) Oct 20

சூப்பர்மாடல் எங்கே?... போலீசுக்கே தண்ணிகாட்டும் மீரா மிதுன் - கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை

தலைமறைவாக உள்ள மீரா மிதுனை இன்னும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது மொபைலும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாக இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்த போலீஸ், அவரது உறவினர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் படிக்க

09:51 AM (IST) Oct 20

இது மட்டும் இருந்திருந்தால் நான் அப்பவே முதலமைச்சர் ஆகியிருப்பேன்...! சரத்குமார் ஆதங்கம்

தற்போது இருப்பதைப்போல் அப்போது செல்போன், வீடியோ கேமராக்கள், சமூக வலைதளங்கள் இருந்திருந்தால் நாங்கள் செய்த தொண்டிற்கு நான் அப்போதே முதலமைச்சராகி இருப்பேன் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க..

09:31 AM (IST) Oct 20

மதுரையில் செல்போனுக்காக உயிரை விட்ட பிளஸ் 2 மாணவி..! அலறி துடிக்கும் பெற்றோர்

பிளஸ்- 2 மாணவி பயன்படுத்தி வந்த செல்போனை பெற்றோர் பறித்ததால் விரக்தி அடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க..

09:07 AM (IST) Oct 20

தங்கமணி கோட்டையில் புகுந்து வேட்டை.. முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய ஓபிஎஸ்.. அதிர்ச்சியில் இபிஎஸ்.!

எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு ஓபிஎஸ் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். முதலில் தங்கமணிக்கு எதிராக 3 மாவட்ட செயலாளர்களை நியமித்து அதிர்ச்சி கொடுத்த நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ, சிட்டிங் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இணைந்து பேரதிர்ச்சியை கொடுத்துள்ளனர். 

மேலும் படிக்க

07:42 AM (IST) Oct 20

பாம்பன் பாலத்தில் மீண்டும் விபத்து.. அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பயணிகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

07:36 AM (IST) Oct 20

அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலை.யில் முறைகேடு

2012 முதல் 2016ம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.11 கோடி ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. வேலையே செய்யாத நிறுவனத்திற்கு பணப்பட்டுவாடா செய்தது சிஏஜி அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. 

07:35 AM (IST) Oct 20

கோர்ட்டில் அமலாக்கத்துறை எடுத்து வைத்த வாதம்.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்?

தற்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக அவர் மீது ஏராளமானோர் புகார் கொடுத்தனர்.

மேலும் படிக்க