MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூப்பர்மாடல் எங்கே?... போலீசுக்கே தண்ணிகாட்டும் மீரா மிதுன் - கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை

சூப்பர்மாடல் எங்கே?... போலீசுக்கே தண்ணிகாட்டும் மீரா மிதுன் - கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை

தலைமறைவாக உள்ள மீரா மிதுனை இன்னும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

1 Min read
Ganesh A
Published : Oct 20 2022, 09:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். அந்நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்றபோது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இவர், தன்னைத்தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டதால கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னர் விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் பற்றி அவதூறாக பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

24

இவரும் இவரது நண்பர் சாமும் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதை அடுத்து இவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீரா மிதுனையும் அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையும் படியுங்கள்... என் பொண்ணா இருந்தா செருப்பாலயே அடிப்பேன்! வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஜிபி முத்து.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

34

இதையடுத்து இருவரும் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். பின்னர் இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற விசாரணையின் போது சாம் மட்டுமே ஆஜரானார். முக்கிய குற்றவாளியான மீரா மிதுன் ஆஜராகாமல் தலைமறைவு ஆனதை அடுத்து அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

44

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமறைவாக உள்ள மீரா மிதுனை இன்னும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது மொபைலும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாக இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்த போலீஸ், அவரது உறவினர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... ஆண்ட்டினு சொன்ன அசல் கோளார்.... டார் டாராக கிழித்த தனலட்சுமி..! பிக்பாஸ் வீட்டில் நடந்த மிகப்பெரிய சண்டை

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved