துணிவுக்கு ஓகே, ஆனால் வாரிசுக்கு நோ சொல்லும் அண்ணாமலை
நடிகர்கள் அஜித் குமார், விஜய் ஆகியோரின் படங்களான வாரிசு, துணிவு என இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகியுள்ள நிலையில், அரசியலில் நான் துணிவாக இருப்பேன், ஆனால் வாரிசு அரசியலை கடுமையாக எதிர்ப்பேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான நடிகர்கள் அஜித் குமார், விஜய் ஆகியோரின் படங்களான வாரிசு, துணிவு என இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
பொங்கல் சிறப்பு கட்டண ரயில்கள் இன்று முதல் இயக்கம்
செய்தியாளர் சந்திப்பின் போது வாரிசு, துணிவு படம் குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசுகையில், எனக்கு நடிகர் விஜய்யும் பிடிக்கும், நடிகர் அஜித்தையும் பிடிக்கும். அஜித் அவர்கள் தனி மனிதனாக உழைப்பினால் யாருடைய ஆதரவும் இன்றி சினிமா துறையில் சாதித்து பலருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.124 மதிப்பில் கடத்தல் பொருள் பறிமுதல்
விஜய் அவர்களை முதல் படத்திலிருந்து பார்த்து வருகிறேன். இன்றைக்கு அவர் மிரட்டி இருக்கிறார். வாரிசு, துணிவு இரண்டு படத்தையும் நான் பார்ப்பேன். அரசியல்ல துணிவா இருப்பேன் வாரிசு அரசியலை எதிர்க்கிறோம்.நேரம் இருக்கும்போது இரண்டு படத்தையும் சென்று பார்ப்பேன் இரண்டு நடிகர்கள் மீதும் மிகப்பெரிய அபிப்பிராயம் இருக்கிறது. ரசிகர்கள் யாரும் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. அஜித், விஜய் போல் நீங்களும் தனித்துவமாக வரவேண்டும். உங்களுக்கு பல கடமைகள் உள்ளன. ரசிகர்கள் யாரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது இதை நான் அரசியலாக சொல்லவில்லை சகோதரராக சொல்கிறேன் என்றார்.