Asianet News TamilAsianet News Tamil

விவசாயிகளுக்காக மாபெரும் முடிவெடுத்த ஜி.வி பிரகாஷ்..! அற்புத ஐடியா..வருவார்களா வியாபாரிகள்...?!

கஜா புயலால் புதுக்கோட்டை, வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் முதல் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என  பெரும்பாலோனோர் உதவி கரம் நீட்டி வருகின்றனர். அரசும் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

கஜா புயலால் புதுக்கோட்டை, வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் முதல் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என  பெரும்பாலோனோர் உதவி கரம் நீட்டி வருகின்றனர். அரசும் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் டெல்டா விவசாயிகளின் நிலையை நேரில் சென்று பார்வையிட்ட ஜி.வி பிரகாஷ் ....முறிந்து வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை கண்டு மிகவும் வேதனை அடைந்தார்.

“பெத்த புள்ள காப்பாத்துதோ இல்லையோ தென்னம்புள்ள காப்பாத்தும் என சொல்வார்கள்...ஆனால் இன்றைக்கு தன் எதிரே சீர்குலைந்து போன தென்னை மரங்களை பார்க்கும் போது நமக்கே தாங்க முடியாத வேதனை தருகிறது என்றால்.. விவசாய பெருமக்களுக்கு எந்த அளவிற்கு வேதனை இருக்கும் என்று நினைத்து பாருங்கள்....

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, ஏற்கனவே தென்னை மரங்களை இழந்து வாடும் விவசாயிகளின் வேதனையை புரிந்துக் கொள்ளாமல், இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி குறைந்த விலையில் தேங்காய்களை வாங்கி செல்ல சில விஷமிகள் செயல்படுகின்றனர்.
ஆனால், ஜி.வி பிரகாஷோ.....இது போன்ற தவறை யாரும் செய்யக்கூடாது என அன்பு வேண்டுகோள் வைத்து, நல்ல விலைக்கு தேங்காய்களை வாங்கி செல்ல வியாபாரிகள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளார்.

மேலும் அதற்காக ஒரு மொபைல் எண்ணையும் தெரிவித்து உள்ளார் ஜி.வி பிரகாஷ். இவருடைய சேவைக்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
தொடர்புகொள்ள வேண்டிய விவசாயி எண்: 6374484149.

Video Top Stories