Asianet News TamilAsianet News Tamil

தமிழகம் முழுவதும் இன்று… முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

தமிழகத்தில் முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்குகின்றன.

College first year students class
Author
Chennai, First Published Oct 4, 2021, 8:37 AM IST

சென்னை:  தமிழகத்தில் முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்குகின்றன.

College first year students class

தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில் கல்வி நிலையங்கள் ஒட்டு மொத்தமாக மூடப்பட்டன. தற்போது கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருகிறது.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 1500 என்ற அளவில் கொரோனா தொற்றுகள் பதிவாகி வருகின்றன. இந் நிலையில் பாதிப்பு குறைந்ததால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

College first year students class

குறிப்பாக, கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்க உள்ளன. 3 மற்றும் 2ம் ஆண்டு மாணவர்கள் போன்று முதலாமாண்டு மாணவர்களுக்கும் ஒருநாள் விட்டு ஒருநாள் என 2 நாட்கள் வகுப்புகள் நடக்கும்.

College first year students class

புதியதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தொளி பயிற்சி வழங்க கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் அனுமதி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முறையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios