Asianet News TamilAsianet News Tamil

கொரோனா காலத்தில் பதியப்பட்ட 10 லட்சம் வழக்குகள் வாபஸ்.. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி அறிவிப்பு..

கடந்த 2019-2020 ஆண்டு கொரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுவதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
 

10 lakh cases filed during Corona period withdrawn- DGP Sylendra Babu Order
Author
Tamil Nadu, First Published May 15, 2022, 4:14 PM IST

இதுதொடர்பாக தமிழக காவல்துறையினருக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனா ஊரடங்கு காலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் ஆகியோர்கள் மீது சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் படிக்க: கொடுத்த வாக்குறுதிகளுக்கு எதிர்மறையாக திமுக செயல்படுகிறது... டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!!

இவ்வழக்குகளுள் வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவற்றைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் பொதுமக்களின் நலன் கருதி கைவிடப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் அரசியல் திருப்பங்களுக்கு காரணமான இடம்.. பொன்விழா காணும் வேதா இல்லம்.. ஓபிஎஸ் உருக்கம்..

Follow Us:
Download App:
  • android
  • ios