மன்னிப்புக் கேட்ட ஜெயலலிதா.... பதறிய நர்ஸ்….
சாதாரண காய்ச்சல் மற்றும் நீரிழப்பு நோய் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயல்லிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கட்ப்பட்ட முன்றாவது நாளில் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இரண்டு நாட்கள் கழித்து திடீரென கண்விழித்த பார்த்த ஜெயலலிதா, அங்கு பணியில் இருந்த நர்ஸ் அயர்ந்து துங்கிக்கொண்ருந்த்தைப் பார்த்துள்ளார். இதைப் பார்த்து கோபமடைந்த ஜெயலலிதா, அவரை எழுப்பச்சொல்லி, பணியில் இருக்கும் போது துரங்கலாமா என அந்த நர்ஸை கடிந்து கொண்டாராம்.
சில நாட்கள் கழித்து ஜெயலலிதாவின் அறைக்குள் அந்த நர்ஸ் வந்த போது, அவரிடம் மன்னிப்புக் கேட்ட ஜெயலலிதா, தாம் பேசியதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், வேதனையில் அவ்வாறு பேசிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் பதறிப் போன அந்த நர்ஸ் மிகவும் நெகிழ்ந்து போய் ஜெயல்லிதாவைப் பார்த்து கைகூப்பி வணங்கியுள்ளார்.