ஃப்ரெஞ்ச் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி சாம்பியன்
ஃப்ரெஞ்ச் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவின் ஃபைனலில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
ஃப்ரெஞ்ச் ஓபன் 750 பேட்மிண்டன் தொடர் பாரிஸ் நகரில் கடந்த 25ம் தேதி முதல் நடந்தது. இந்த தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி ஃபைனலுக்கு முன்னேறியது.
அரையிறுதியில் கொரியாவின் கியூ - கிம் ஜோடியை 21-18 மற்றும் 21-14 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி ஃபைனலுக்கு முன்னேறியது.
ஃபைனலில் லு சிங் யாவோ - யாங் போ ஹான் ஜோடியை எதிர்கொண்டு ஆடிய சாத்விக் - சிராக் ஜோடி அபாரமாக விளையாடி 21-13 மற்றும் 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
ஃப்ரெஞ்ச் ஓபன் பேட்மிண்டனில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. சாத்விக் - சிராக் ஜோடி இந்தியாவிற்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து அசத்தியது.