Asianet News TamilAsianet News Tamil

அடத்தூ.. 2 வருஷம் ஆகியும் குழந்தை இல்லை.. மனைவியை தன் சகோதரனிடம் ஒப்படைத்த கணவன்.. 3 ஆண்டுகள் வன்புணர்வு.

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை  இல்லாத காரணத்தால் தனது கணவன் தனது மனைவியை  கட்டாயப்படுத்தி தன் அண்ணனுடன் உடலுறவு கொள்ள வைத்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது

No child for 2 years .. Husband who handed over wife to his brother .. 3 years  sexual abuse
Author
Chennai, First Published May 28, 2022, 5:09 PM IST

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை  இல்லாத காரணத்தால் தனது கணவன் தனது மனைவியை  கட்டாயப்படுத்தி தன் அண்ணனுடன் உடலுறவு கொள்ள வைத்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக அந்த பெண் பாலியல் சித்திரவதை அனுபவித்துள்ள வந்துள்ளார். அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை சித்தரவதை செய்து வந்த கணவன், மூத்தனார், மைத்துனரை தேடி வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இந்த கொடூரம் நடந்துள்ளது. 

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் காவல் நிலையத்தில் 27 வயதான பெண் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தான் பிந்த்கோஹாட்டை சேர்ந்தவள் எனக்கூறியதுடன் தனக்கு கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரால் நேர்ந்த கொடுமை குறித்து விவரித்துள்ளார். அதாவது, அந்தப்பெண்  கடந்த  2015ஆம் ஆண்டு குவாலியர் மாவட்டத்திலுள்ள பிஜெளலி  அப்பகுதியைச் சார்ந்த இளைஞனை திருமணம் செய்து கொண்டார். அவரது கணவரும்  மைத்துனரும் குவாலியரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். திருமணத்திற்குப் பிறகு கோஸ்புராவில்  வசித்து வந்தனர். அங்கு அவருடன் தன் கணவருடன், கணவரின் அண்ணனும், மைத்துனரும் வசித்துவந்தனர்.

No child for 2 years .. Husband who handed over wife to his brother .. 3 years  sexual abuse

இந்நிலையில் அவளுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் இருவரும் மருத்துவர்களை சந்திக்க திட்டமிட்டனர், அப்போது கணவன் மருத்துவர்களை சந்திப்பதற்கு முன் தனது அண்ணனுடன் மனைவியை உடலுறவு கொள்ள வைக்கதிட்ட மிட்டார், இது குறித்து தனது மனைவியிடம் கூறினார், ஆனால் அவரது மனைவி அதை ஏற்க வில்லை, ஆனால் குழந்தைக்காக தனது மனைவியை மூத்த சகோதரனிமல் உடலுறவு கொள்ள கூறினான், எனவே கடந்த 2017 ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி இரவு கனவணின் சகோதரன் அந்த பெண்ணை வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார், அன்று முதல் 3 ஆண்டுகளுக்கு 

கணவனின் அண்ணன் மைத்துனர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவந்தனர். அதேநேரத்தில் மாமனாரும் மருமகனுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்ததாக தெரிகிறது. அதன்பிறகும் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை.  ஆனாலும் அடிக்கடி மூத்தனார் மைத்துன்னர், மாமனார் என தொடர்ந்து பாலியல் சித்திரவதை செய்து வந்தனர். ஒவ்வொரு முறையும் அவர்களிடம் இருந்து தப்பிக்க அந்தப் பெண் போராடினார், எதிர்த்தார், ஆனால்  அவர்கள் அந்த பெண்ணை ஈவிரக்கமின்றி கற்பழித்து வந்தனர். இதை வெளியில் சொன்னால் பலரும் பல விதத்தில் பேசுவர், மானம் போய்விடும் என்று அஞ்சிய அந்தப் பெண் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த கொடுமையை சகித்து வந்தார் 2020ஆம் ஆண்டு வரை அந்தப் பெண்ணுக்கு குழந்தை இல்லாததால், கணவர் மற்றும் அவரது சகோதரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

No child for 2 years .. Husband who handed over wife to his brother .. 3 years  sexual abuse

அதன் பிறகு அவர்கள் பிரிந்தனர். இரவில் கணவன் அந்த பெண்ணை கான்பூருக்கு அழைத்துச் சென்றான், அங்கும் அந்தப் பெண்ணுக்கு குழந்தை இல்லை, இதனால் விரக்தியடைந்த கணவன் அந்த பெண்ணின் குறைகளை சொல்லி அவமானப்படுத்தியது, தான் வீட்டை விட்டே மனைவியை வெளியேற்றினார், இதனை அடுத்து அந்த பெண் தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் அவரது அண்ணன் மற்றும் தம்பியிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விவரித்தார். அடுத்து அவர்கள் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு தைரியம் கூறியதுடன் அந்தப் பெண்ணுடன் வந்து குவாலியர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதி அளித்துள்ளனர் .
 

Follow Us:
Download App:
  • android
  • ios