மதுரையில் கொடி கட்டி பறக்கும் பாலியல் தொழில்..! சுற்றி வளைக்கும் போலீஸ்.
கூடல் மாநகரமான மதுரையில் ஆன்மீகம் போய் ஆன்லைன் விபச்சாரம் கிளப் மஜாஜ் சென்டர்கள் என விபச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. விபச்சாரம் ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் கொலை இந்த இரண்டும் மதுரையை மக்களை அச்சமடையவைத்திருக்கிறது.
கூடல் மாநகரமான மதுரையில் ஆன்மீகம் போய் ஆன்லைன் விபச்சாரம் கிளப் மஜாஜ் சென்டர்கள் என விபச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. விபச்சாரம் ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் கொலை இந்த இரண்டும் மதுரையை மக்களை அச்சமடையவைத்திருக்கிறது.
மதுரையில் கொரோனா தொற்று காரணமாக தங்கும் விடுதிகள் பூட்டப்பட்டுள்ளது.சில லாட்ஜ்கள் கொரோனா அறிகுறி இருக்கும் நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு அங்கே தங்கிக்கொள்கிறார்கள்.அதற்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.இந்த நிலையில் கரண்ட் பில் கூட கட்ட முடியாத அளவிற்கு சில லாட்ஜ் இருக்கிறது.இந்த நிலையில் தான் விபசாரம் கொடிகட்டி பறக்கிறது. மதுரையில் விபசாரத்தை தடுப்பதற்காக மதுரை போலீஸ் கமிசனர் டேவிட் ஆசிர்வாதம் தனிப்படை அமைத்து கிளப் பெயரில் நடக்கும் விபசாரத்தை தடுத்து வந்தார்.
இந்த நிலையில் சில விடுதிகளில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும்.அதனடிப்படையில் மதுரை காக்கா தோப்பு ஸ்டார் டவர் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடப்பதை உறுதிபடுத்தியது போலீஸ். திடீர்நகர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கீதாலட்சுமி தலைமையில் அங்கு சென்ற தனிப்படையினர், சம்பந்தப்பட்ட லாட்ஜ் அறைகளை ஆய்வு செய்த போது அறை எண் 303 மற்றும் 306-ல் 3 பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த மூன்று பெண்களை மீட்ட போலீசார் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். பெண்களை அத்தொழிலுக்கு அழைத்து வந்த விருதுநகர் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்த குமார், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்த முகமது ரிஸ்வான், மதுரை தசரதன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.பாலியல் தொழில் நடைபெறுகிறது என தெரிந்து அதற்கு அனுமதி அளித்த தங்கும் விடுதியின் உரிமையாளர் சிவக்குமாரை தேடி வருகின்றனர்