Asianet News TamilAsianet News Tamil

கலவர பீதியில் நடுங்கிய டெல்லி மக்கள்.!! நாங்கள் இருக்கிறோம் அஞ்ச வேண்டாம் என நெஞ்சை நிமிர்த்திய ஹிரோ போலீஸ்

மக்கள் தைரியமாக வெளியில் வந்து பொருட்களை வாங்கலாம் ,  மக்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம் ,   பாதுகாப்பிற்காக நாங்கள் (காவல்துறை) இருக்கிறோம் .  உங்கள் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்கிறது.  

Delhi police dc op misra announce like don't afraid police be protection to public,
Author
Delhi, First Published Feb 27, 2020, 2:00 PM IST

டெல்லியில் மக்கள் யாருக்காகவும் எதற்காகவும் அஞ்ச வேண்டாம்,  உங்கள்  பாதுகாப்பிற்கு நாங்கள் இருக்கிறோம் என டெல்லி காவல் இணை ஆணையர் பேசியிருப்பது  மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது . மக்கள் அச்சமின்றி வெளியில் வரலாம் என்று அவர் கூறியிருப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது கலவர பீதியில் உள்ள மக்கள் மத்தியில் காவல் துறை அதிகாரியாக அவர் பேசியிருப்பது  சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது .  

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு  ஆதரவாகவும் எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது .  இதில் தெற்கு டெல்லியில்  ஜாப்ராபாத் ,  , சீலம்பூர் ,  சாம்பார்க்,  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பிற்கும் இடையே கடும் மோதல் வெடித்தது .  கடந்த 3 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் கலவரத்தில்  பொதுச் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 

Delhi police dc op misra announce like don't afraid police be protection to public,  

கண்ணில் பட்டதையெல்லாம் வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்தி வருகின்றனர்.  இந்த கலவரத்தில் இதுவரையில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . நூற்றுக் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் .  இந்த கலவரத்திற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் ,  உளவுத்துறையின் படுதோல்வியை கலவரத்திற்கு காரணம் ,  போலீசார் தகுந்த பாதுகாப்பு கொடுக்கவில்லை என பல்வேறு  விமர்சனங்கள் எழுந்துள்ளன.   இந்நிலையில் கலவரம் பாதித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் துணை ராணுவத்தினர் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர் .  இதில் சாம்பார்க் பகுதியில் கொடியை அணிவகுப்பில் ஈடுபட்ட டெல்லி காவல்துறை துணை ஆணையர், ஓ.பி மிஸ்ரா ,  ஒலிபெருக்கி மூலம் மக்களிடம் உரையாற்றினார் அப்போது கூறிய அவர் ,  மளிகை ,  மருத்துவம் மற்றும் உள்ளிட்ட  அடிப்படை பொருட்கள்  விற்பனை செய்யும் கடைகள் தாராளமாக திறக்கலாம் . 

Delhi police dc op misra announce like don't afraid police be protection to public,

மக்கள் தைரியமாக வெளியில் வந்து பொருட்களை வாங்கலாம் ,  மக்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம் ,   பாதுகாப்பிற்காக நாங்கள் (காவல்துறை) இருக்கிறோம் .  உங்கள் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்கிறது.   ஆனால் யாரும் குழுக்களாக நிற்க வேண்டாம் ,  இளைஞர்கள் அதை செய்ய வேண்டாம் . உடனே  மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம் .  வேலைக்கு செல்பவர்கள் செல்லலாம் ,  யாரும் எதற்காகவும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை .  உங்களுக்கு ஏதாவது பயம் இருப்பின் எங்களிடம் வந்து அதை தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார் .   வன்முறையால் பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . டெல்லியில் உள்ள  கடைகள் தெருக்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது . இந்நிலையில்  காவல் துறை  துணை ஆணையரின் பேச்சு கலவரம் பாதித்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது .

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios