Asianet News TamilAsianet News Tamil

மருத்துவமனைக்கு வந்த பெண்.. அந்த இடத்தில் ஆணுறையை வைத்து கட்டுப் போட்ட டாக்டர்... பிறகு நடந்த பயங்கரம்.

தலையில் காயத்துடன் வந்த பெண் நோயாளிக்கு டாக்டர் ஒருவர் ஆணுறையை வைத்தது கட்டுப்போட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அந்த டாக்டரின் உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


 

Damn it... the doctor who bandaged the girl with a condom... what happened next.
Author
Madhya Pradesh, First Published Aug 22, 2022, 9:28 PM IST

தலையில் காயத்துடன் வந்த பெண் நோயாளிக்கு டாக்டர் ஒருவர் ஆணுறையை வைத்தது கட்டுப்போட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அந்த டாக்டரின் உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பொதுவாக, மருத்துவர்கள் பொதுமக்களை மிக அலட்சியமாக நடத்துகின்ற போக்கு பரவலாக அதிகரித்து வருகிறது. கடவுளுக்கு நிகராக பார்க்கப்படும் மருத்துவர்கள் முழுக்க முழுக்க பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்பட்டு வருகின்றனர், அதற்காக சிகிச்சைக்கு வருபவர்களிடம் இல்லாதது பொல்லாததை  கூறி  பணத்தை கறப்பதில் குறியாக இருந்து வருகின்றனர். இதனால் சமூகத்தில் மருத்துவர்கள் மீது நல்லெண்ணம் தலைகீழாக மாறி வருகிறது. இந்த வரிசையில் காயத்துடன் மருத்துவமனைக்கு வந்த பெண்ணுக்கு மருத்துவர் ஆணுறையை வைத்து கட்டுப்போட்டு உள்ள சம்பவம் நடந்துள்ளது.

Damn it... the doctor who bandaged the girl with a condom... what happened next.

முழு விவரம் பின்வருமாறு மத்திய பிரதேசம் மாநிலம் மொரோனா மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார  மையம்  இயங்கி வருகிறது, இந்நிலையில் தர்மகரைச்  சேர்ந்த ரேஷ்மா பாய் என்ற பெண் தலையில் காயம் ஏற்பட்டு மொரோனாவில் உள்ள போர்சா ஆரம்ப சுகாதார  மையத்திற்கு வந்தார், அப்போது அங்கு மருத்துவர் தர்மேந்திர ராஜ்புத் பணியில் இருந்தார். வார்டு பாய் ஆனந்த் ராமிடம் காயத்தின் மீது  பஞ்சு வைத்து கட்டும்படி கூறினார், இந்நிலையில் அந்த நபர் பஞ்சுப்பு பதிலாக ஆணுறை பாக்கெட்டை கொடுத்தார், அதைக் கவனிக்காத டாக்டர் தர்மேந்திரா ராஜ்புத் காயத்தின் மீது ஆணுறையை வைத்தே கட்டு போட்டார்.

ஆனால் அந்த பெண்ணின் காயம் குணமாகவில்லை, மாறாக மேலும் தீவிரமடைந்தது, பின்னர் மாவட்ட மருத்துவமனைக்கு அந்த பெண் சென்றார், அப்போது மருத்துவர்கள் அந்த கட்டை அவிழ்த்து பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அந்தப் பெண்ணின் பேண்டேஜை அகற்றிய மருத்துவர்கள் அதில் ஆணுறை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Damn it... the doctor who bandaged the girl with a condom... what happened next.

பின்னர் இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர், பணியிலிருந்த ஒரு டாக்டரின் அலட்சியத்தால் அந்தப் பெண்ணுக்கு காயம் மேலும் தீவிரமடைந்தாக புகார் கூறினார். இதனையடுத்து மாநில சுகாதாரத்துறை போர்சா சமூக சுகாதார மையத்தில் வார்டு பாய் ஆனந்த் ராமை இடைநீக்கம் செய்துள்ளது, மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios