சுய இன்பம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்...ஆணுக்கொரு நீதி..! பெண்ணுக்கொரு நீதியா..?
சுய இன்பம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சுய இன்பம் என்பது, ஒரு நபர் தனது பாலின உறுப்பை தானே தூண்டி இன்பம் காண்பதாகும். இந்த சுய இன்பம் நபருக்கு நபர் வேறுபடுகிறது. சிலருக்கு வாரம் ஒருமுறை, சிலருக்கு தினமும், சிலருக்கு ஒரே நாளிலேயே பல முறை என வேறுபடும். ஒரு சிலர் தனது செக்ஸ் ஆசையை தீர்த்து கொள்ளவும், வேறு சிலர் பல காரணங்களுக்காவும் கூட சுய இன்ப பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில், மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஆண்களோ, பெண்களோ இருவருருக்குமே சுய இன்பம் தேவை. ஆனால், இது ஆண்கள் செய்தால் அனுமதிக்கும் சமூகம் பெண்கள் செய்யவே கூடாத பெருந்தவறு எனக் கருதுகிறது. இருப்பினும், மருத்துவர்கள் ஆணா, பெண்ணோ சுய இன்பம் காணலாம் என்று கூறுகின்றனர். வெறும் கைகளோ, செக்ஸ் டாய்ஸோ பயன்படுத்தலாம் எனப் ருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சுய இன்பத்தால் ஏற்படும் சில நன்மைகள் குறித்து கீழே அறிந்து கொள்ளுங்கள்:
சுய இன்பம் செய்வதால் மனச்சோர்வு குறைகிறது. இதன் காரணமாகவே பெரும்பாலான ஆண்கள் சுயஇன்பம் தவறாமல் செய்கிறார்கள். சுயஇன்பம் ஆண்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாகவும், குளிருக்கு இதமாக இருப்பதகாவும் கூறி வருகின்றனர்.
சுய இன்பத்தால் சிறுநீரக பிளேடருக்கு வலு சேர்கிறது. இன்னொன்று பெண்களுக்கு பெல்விக் ஃப்ளோர் எனப்படும் இடுப்புப் பகுதி தசைகள் வலுப்பெறுகிறது. சிறுநீரக பிரச்சினைகள், ஆண்களில் விரைப்புப் பிரச்சினைகளுக்கு இது தீர்வாகிறது.
இதயத்தில் நல்லது சுய இன்பம் மூலமாக ஆண்களும் சரி பெண்களும் சரி அவர்களின் இதயத்திற்கு பல்வேறு நன்மைகளை அவர்களை அறியாமலேயே தேடிக் கொடுக்கின்றனர்.
சுய இன்பத்தில் ஈடுபடும் சமயத்தில் நமது உடலில் ரத்த ஓட்டம் வேகமாகிறது. அந்த சமயத்தில் நமது இதயத் துடிப்பு சீராகி இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது. அதாவது சுய இன்பம் அனுபவிப்பது என்பது ஒரு உடற்பயிற்சியை போல நமது உடலுக்கு உதவுகிறது.
பல ஆண்கள் நல்ல தூக்கத்திற்காக சுய இன்பம் செய்கிறார்கள். சுய இன்பத்தில் ஈடுபடுவதன் மூலம் நம் ஆழ்ந்த உறக்கத்தை பெற முடியும் என்பது பலரின் கருத்தாகும்.
பெண்கள் பாலியல் உறவில் பெறும் உச்ச உணர்வு தான் ஆர்கஸம் எனப்படுகிறது. சுய இன்பத்தின் போது பெண்களுக்கு ஆர்கஸம் கிடைப்பது உறுதியாகிறது. இதனால் மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்குமாம். கர்பப்பை சுருங்கி விரிந்து கொடுப்பதால் ஆக்ஸிடாசின் சுரக்கிறது. இந்த லவ் ஹார்மோன் மகிழ்ச்சியைக் கொடுத்து உடலை அப்படியே ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது எனக் கூறப்படுகிறது.
ஆமாம், ஆணோ, பெண்ணோ சுய இன்பம் கொள்வது மிகவும் பாதுகாப்பான பாலியல் இன்பம். பால்வினை நோய்கள் வராது. பெண்களுக்கு தேவையற்ற கர்ப்பம் ஏற்படாது.
இருப்பினும், அதிகப்படியான கைப்பழக்கம் ஒரு சில விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. சுய இன்பமும் மற்ற எல்லா வகையான போதைப்பொருட்களையும் போலவே, இது உற்பத்தித்திறன் குறைவதற்கும், உறவுகளுக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்திற்கும் வழிவகுக்கும். அதிக கைபழக்கம் பின்பக்க முதுகு வலியை ஏற்படுத்தலாம். சுயஇன்பம் குறித்து கடுமையான குற்ற உணர்வு, கடுமையான மனநோய்களுக்கு வழிவகுக்கும்.