Asianet News TamilAsianet News Tamil

மற்றொரு கோவிட் போன்ற தொற்றுநோய் சீனாவில் இருந்து வருகிறதா? எய்ம்ஸ் மருத்துவர் சொன்ன தகவல்..

சீனாவில் சுவாசநோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மற்றொரு கோவிட் போன்ற தொற்று பரவக்கூடுமா என்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

Another covid-like pandemic coming from China? Information given by AIIMS doctor.. Rya
Author
First Published Nov 28, 2023, 7:27 AM IST

சீனாவில் அதிகரித்து வரும் சுவாச நோய்களுக்கு மத்தியில், குளிர்காலத்தில் வைரஸ் தொற்றுகள் பொதுவானவை என்றும், மற்றொரு கோவிட் போன்ற தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் எய்மஸ் மருத்துவர் கூறியுள்ளார். எய்மஸ் மருத்துவமனையின் தாய் சேய் நலர் பிரிவு தலைவர் டாக்டர் எஸ்.கே.கப்ரா இதுகுறித்து பேசிய போது, "அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே திடீரென சுவாச நோய்த்தொற்றுகள் அதிகரித்திருப்பதாக சீனாவில் இருந்து வரும் அறிக்கைகள் காட்டுகின்றன.

மேலும் இது குழந்தைகளில் மிகவும் பொதுவானது என்பதை அவர்கள் கவனித்தனர். பார்க்கவில்லை. புதிய அல்லது அசாதாரண வைரஸ்கள் எதையும் அவர்கள் பார்க்கவில்லை. இது ஒரு புதிய உயிரினம் என்பதற்கான எந்த அறிகுறியும் இன்னும் இல்லை, மேலும் இது கோவிட் போன்ற ஒரு தொற்றுநோயை ஏற்படுத்துமா என்று சொல்வது கடினம். அதற்கு எந்த வாய்ப்பும் தற்போதைக்கு இல்லை." என்று தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய அவர் சீனாவில் இருந்து வரும் அறிக்கைகளில் குளிர்காலத்தில் பொதுவான வைரஸ்கள் காணப்படுவதாக அவர் கூறினார். மேலும் "இப்போது நிபுணர்கள் இதைப் பற்றி விவாதித்துள்ளனர், அவர்களின் கூற்றுப்படி, 2-3 விஷயங்கள் அதிகரித்திருக்கலாம். முதலாவதாக, குளிர்காலத்தில் வைரஸ் தொற்று மிகவும் பொதுவானது, அவற்றில் முக்கியமானது இன்ஃப்ளூயன்ஸா, அடினோவைரஸ் மற்றும் மைக்கோபிளாஸ்மா. சீனாவிலும் இப்போது வரை இதே போன்ற வைரஸ்கள் தான் பரவுகின்றன. புதிதாக எதுவும் இல்லை. ஆனால் கோவிட் தொற்று கடந்துவிட்டதால், புதிய வைரஸ் வந்துவிட்டதா என்று தொற்றுநோய் மக்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள்," என்று தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சீனாவில் கடுமையான லாக்டவுன் காரணமாக சுவாச நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் டாக்டர் கப்ரா தெரிவித்தார். மேலும் "சீனாவில் லாக்டவுன் மிகவும் கண்டிப்பானதாக இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் அது நீக்கப்பட்டது, அதன் பின்னர் இது முதல் குளிர்காலம். 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் வைரஸ் தொற்று ஏற்படுகிறது 3 -ஆண்டுக்கு 8 முறை, ஒவ்வொரு நோய்த்தொற்றின் போதும், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது.பின், 5 வயதிற்குப் பிறகு, நோய்த்தொற்றின் விகிதம் குறைகிறது.இதனால், லாக்டவுன் காரணமாக வீட்டை விட்டு வெளியே வர முடியாத குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சியடையவில்லை, இதன் காரணமாக அவர்கள் தொற்றுநோய்க்கு ஆளாகிறார்கள்.

லாக்டவுனின் போது 2-3 ஆண்டுகளில் இந்த நோய்த்தொற்று இல்லாத குழந்தைகளுக்கு, இப்போது தொற்று ஏற்படும் என்று ஒரு கருத்து உள்ளது. ஒரு குழந்தைக்கு இது வந்தால், அது மேலும் 10 பேருக்கு தொற்று ஏற்படும், இதன் காரணமாக பாதிப்புகள் திடீரென அதிகரிக்கும். மக்கள் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் மற்றும் அதிகபட்சமாக சானிடைசர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று” என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர் "ஒரு குழந்தைக்கு தொற்று இருந்தால், அவர் குணமடையும் வரை அவரை வெளியில் அனுப்ப வேண்டாம். பொதுவாக, காய்ச்சல் ஒரு வாரம் நீடிக்கும். முகக்கவசம் பயன்படுத்தலாம் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றலாம். அனைவரும் சுகாதாரத்தை கவனித்துக் கொள்ள வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.

 

கோவிட் விதிகளை கடுமையாக பின்பற்றியவர்களுக்கு மன ஆரோக்கியம் மோசமாக உள்ளதாம்.. ஏன் தெரியுமா?

சீனா இப்போது எதிர்கொள்ளும இந்த நிலையை, கடந்த  ஆண்டு நாம் எதிர்கொண்டோம். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை, தொற்றுநோயை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி முன்பை விட இப்போது நமக்கு நன்றாக தெரியும், இதுபோன்ற தொற்றுநோய் வருகிறதா என்பதை ஆராயுமாறு அமைச்சகம் மருத்துவர்களிடம் கூறியுள்ளது. ஏதேனும் அசாதாரண நிகழ்வை கண்டால் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும், அப்போது தான் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிவுறுத்தி உள்ளது” என்று தெரிவித்தார்.

சீனாவில் தற்போது சுவாச நோய் திடீரன அதிகரித்து வருவதாகவும், இதனால் அந்நாட்டின் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதைத்தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு சீனாவின் இந்த சுவாச நோய் பாதிப்பு குறித்த விரிவான அறிக்கையை கோரியுள்ளது. இதனிடையே இந்தியாவில் சுவாச நோய் பாதிப்புகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios