சுருக்கம்
வேலூர் என்றாலே அசைவ உணவிற்கு பெயர் பெற்ற மாவட்டம். அதிலும் ஆம்பூர் பிரியாணி செம ஃபேமஸ். அது தவிர மிக எளிமையாக, எளிதில் ஜீரண ஆகக் கூகக் கூடிய அசைவ என்றால் அது மீன் சேமியா தான். வேலூருக்கே உள்ள தனித்துவமான உணவுகளில் இதுவும் ஒன்று.
வேலூர் மாவட்டம் அதன் தனித்துவமான உணவுப் பாரம்பரியத்திற்கும் மசாலா நிறைந்த, அசைவ உணவுகளுக்கும் பெயர் பெற்ற ஊராகும். பொதுவாக, வேலூரில் நாட்டுக்கோழி, மட்டன் பரோட்டா போன்றவைகள் பிரபலமானவையாக இருந்தாலும், மீன் உணவுகளும் இங்கு தனித்துவமான சுவையில் செய்வார்கள். "வேலூர் ஸ்டைல் மீன் சேமியா" எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம். இது மீன் குழம்பு மற்றும் சேமியா உப்புமாவின் ஒரு அசத்தலான கலவையாக இருக்கும்
தேவையான பொருட்கள் :
மீன் மசாலா பண்ணும் பொருட்கள்:
மீன் (விருப்பமானது) – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
சேமியாவுக்கான மசாலா மற்றும் வேக வைக்கும் பொருட்கள:
சேமியா – 1 1/2 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி – சிறிதளவு
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
சாம்பார் தூள் / கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
எண்ணெய் / நெய் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – 2 1/2 கப்
தாய்ப்பாலூட்டும் பெண்கள் இந்த 5 உணவுகளை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது
செய்முறை :
- முதலில், மீனை நன்கு கழுவி, மிளகுத்தூள், உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பிசைந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் சூடாக்கி, மீனை கிரிஸ்பியாக பொரித்து தனியாக வைக்கவும்.
- கொஞ்சம் பொரித்த மீன் துண்டுகளை சேமியாவுடன் சேர்க்க, இது உணவிற்கு நிறைய சுவை சேர்க்கும்
- ஒரு பெரிய வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் / நெய் சேர்த்து சேமியாவை லேசாக வறுக்கவும் (இது ஒட்டாமல் இருக்க உதவும்).
- தனியாக வைத்து, அதே வாணலியில் மீண்டும் எண்ணெய் சேர்த்து, கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
- இதற்குப் பிறகு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், கொத்தமல்லி தூள், சாம்பார் தூள் சேர்த்து மணம் வரும் வரை வதக்கவும்.
- 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க விடவும்.
- பின்னர், வறுத்த சேமியாவை இதனுடன் சேர்த்து மிதமான சூட்டில் மூடி வைக்கவும்.
- 5-7 நிமிடங்களில் சேமியா மென்மையாக வெந்து விடும்.
- இறுதியாக, பொரித்த மீனை சேர்த்து, கொத்தமல்லி தூவி, ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி சூடாக பரிமாறலாம்.
- இதை வெங்காய ரைத்தா, எலுமிச்சை ஊற்றிய முட்டை அல்லது கடலை சட்னியுடன் பரிமாறலாம்.
- மேலும் சுவை கூட்ட, முந்திரி வறுத்து சேர்க்கலாம்.
- சாதாரண மீன் குழம்பை விட இந்த மீன் சேமியா மிகவும் கிரிஸ்பி, மசாலா மற்றும் எளிமையான உணவாக இருக்கும்.
கர்ப்பகாலத்தில் உடல் துர்நாற்றம் ஏற்படுகிறதா? இது தான் காரணம்
மேலும் சுவை கூட்ட டிப்ஸ் :
- சேமியாவை லேசாக வறுத்தால் மட்டுமே, அது ஒட்டாமல் இருக்கும்.
- மீன் மிகுந்த சுவையுடன் இருக்க, பொரித்ததை இறுதியில் சேர்க்கவும்.
- கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்ப்பது, உணவிற்கு தென்னிந்திய சுவையை கொடுக்கும்.