வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது அனைவருக்கும் நல்லதா என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.

காலை நேரத்தில் உங்களை நீர்ச்சத்துக்களை அதிகரிப்பது என்பது எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவும். மேலும் அந்த நாளுக்கான ஆற்றலை உங்களுக்கு வழங்கும். எனவே உங்கள் நாளைத் தொடங்கும் போது, தர்பூசணி ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளில் ஒன்றாகத் தெரிகிறது. 90% நீர் உள்ளடக்கம் மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பழங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு அற்புதமான ஊக்கத்தை அளிக்கின்றன என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொண்ட தர்பூசணியை பலர் காலை உணவாக எடுக்கின்றனர். ஆனால் வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது அனைவருக்கும் நல்லதா? 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தர்பூசணி வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்த ஒரு பழம் மற்றும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் ஒரு நபருக்கு நீரேற்றத்தின் நல்ல ஆதாரமாக இருந்தாலும், எல்லோரும் இந்த பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அன்றாட உணவில் பருப்பு வகைகளை சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

வெறும் வயிற்றில் யாரெல்லாம் தர்பூசணி சாப்பிடக்கூடாது?

ஊட்டச்சத்து நிபுணர் அனுபமா மேனன் இதுகுறித்து பேசிய போது “ வெற்று வயிற்றில் பழங்களை உட்கொள்வது ஒரு நபரின் உடல் வகை மற்றும் ஹார்மோன் செயல்பாட்டின் அடிப்படையில் பயனளிக்கலாம் அல்லது பயனளிக்காமல் போகலாம். ஒரு நபர் லெப்டின் எதிர்ப்பின் அறிகுறிகளைக் காட்டினால் அல்லது இன்சுலின் எதிர்ப்பு இருந்தால், காலை உணவில் பழங்கள் சாப்பிட சிறந்த தேர்வாக இருக்காது. ஏனெனில் இது பலனளிக்காது, ஆனால் பழத்தை குறைந்த அளவில் சிற்றுண்டியாக எப்போது வேண்டுமானாலும் உட்கொள்ளலாம், மேலும் பலனடையலாம்.இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, உடலில் அதிகப்படியான லெப்டின் சுரப்பதால் (உற்பத்தி செய்யப்படுகிறது) கொழுப்பு திசுக்களால்), உணர்திறன் குறைந்து, பிரக்டோஸ் சகிப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது, அதனால் உடலில் அதிக கொழுப்பு உற்பத்தி மற்றும் சேமிப்பை ஏற்படுத்துகிறது," என்று தெரிவித்தார்.

வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது கார்டிசோலின் அளவை உயர்த்தும்

காலையில் தர்பூசணியை முதலில் சாப்பிடுவது, பிரக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு தீங்கு விளைவிக்கும், மேலும் இது உடலில் உள்ள கார்டிசோலின் அளவை உயர்த்தக்கூடும், இது இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கும்.

வெறும் வயிற்றில் யார் தர்பூசணி சாப்பிட வேண்டும்?

மேலும் பேசிய அனுபமா “ பழங்களை எந்த சிரமும் இன்றி ஏற்றுக்கொள்ளும் உடல் கொண்ட ஒரு நபர், காலை வேளையில் சிறந்த ஊட்டச்சத்து தேவைக்காக அதை சாப்பிடலாம். முழு பழமாக உட்கொள்ளும் போது பழத்தில் நார்ச்சத்து இருப்பதால், குளுக்கோஸ் மெதுவாக வெளியேற உதவுகிறது, எனவே, குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. பழங்களைத் தேர்ந்தெடுப்பது போலவே, பழங்களைச் சாப்பிடுவதற்கான சரியான நேரம் முக்கியமானது," என்று தெரிவித்தார்.

இந்த பழக்கங்கள் இருந்தால் உடனே மாற்றிக்கொள்ளுங்கள்.. நாள்பட்ட சர்க்கரை நோய் ஏற்படலாம்..