ஜிஎஸ்டி அறிமுக விழாவில் அமிதாப் பச்சன், ரத்தன் டாடா பங்கேற்பு..
இன்று இரவு நடைபெற உள்ள ஜிஎஸ்டி அறிமுக விழாவில் பிலபலங்களான நடிகர் அமிதாப் பச்சன், தொழிலதிபர் ரத்தன் டாடா உள்பட ஏராளமானோர் பங்கேற்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வரும் வகையிலான ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை இன்று நள்ளிரவு முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இதற்கான அறிமுக விழா இன்று நள்ளிரவு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைறுகிறது.
இந்த விழாவில் ஜஎஸ்டி வரி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி அறிவிக்கிறார். அப்போது அவர், மணியடித்து ஜிஎஸ்டியை அறிமுகம் செய்து வைக்கிறார். இன்று நள்ளிரவு நடைபெறும் ஜிஎஸ்டி அறிமுக விழாவில் பிரபல தொழிலதிபர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தொழிலதிபர் ரத்தன் டாடா, அமிதாப் பச்சன், பி.வி.சிந்து உள்ளிட்டோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதி, லதா மங்கேஸ்கர் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.