MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஜீவானந்தத்தை வலைபோட்டு தேடும் குணசேகரன்..! உண்மையை உடைப்பாரா ஈஸ்வரி.. எதிர்பார்ப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல்!

ஜீவானந்தத்தை வலைபோட்டு தேடும் குணசேகரன்..! உண்மையை உடைப்பாரா ஈஸ்வரி.. எதிர்பார்ப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல்!

'எதிர்நீச்சல்' தொடரில் ஜீவானந்தம் யார் என்பது தற்போது தெரியவந்துள்ள நிலையில், இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

3 Min read
manimegalai a
Published : Aug 11 2023, 03:27 PM IST| Updated : Aug 11 2023, 03:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல். ஒவ்வொரு வாரமும் டி ஆர் பி-யில் தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த சீரியலில், ஆணாதிக்கத்தோடு சுற்றிக் கொண்டிருந்த குணசேகரனுக்கு ஆப்பு வைக்கும் விதமாக அப்பத்தாவின் 40 சதவீத சொத்துக்களை, அவருக்கே தெரியாமல் ஜீவானந்தம் என்பவர் தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டுள்ளார்.

27

இந்த ஜீவானந்தம் யாராக இருக்கும் என்பது மிகப்பெரிய புதிராக இருந்த நிலையில், இந்த வாரம் அதற்கான பதில் கிடைத்துள்ளது. ஏற்கனவே ரசிகர்கள் கணித்தது போல் ஜீவானந்தம் ஈஸ்வரியின் முன்னாள் காதலர் என்பது, தற்போது தெரியவந்துள்ளது. எனினும் பட்டமாலுக்கும் - ஜீவானந்தத்திற்கும் என்ன உறவு, எதன் அடிப்படையில் அவரது சொத்துக்கள் அனைத்தும் ஜீவானந்தத்திடம் சென்றது என்பது பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

Jailer: 'வாரிசு' படத்தின் மொத்த வசூலை... ஒரே நாளில் பீட் செய்த 'ஜெயிலர்'! இது தான் சூப்பர் ஸ்டார் பவர்!

37

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரி அவருடைய அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, ஜீவானந்தம் தன்னுடைய பிஏ உடன் அங்கு வர, ஈஸ்வரியின் தந்தை ஜீவானந்தத்திடம் எதற்கு இங்கு வந்தீங்க என்னுடைய சொத்தையும் அபகரித்து செல்லவா? என சத்தம் போடுகிறார். பின்னர் ஜீவானந்தம் தந்தையிடம் சண்டை போடுவது போல் தெரியவே, ஈஸ்வரி அந்த இடத்திற்கு வர...  மிகவும் காட்டமான வார்த்தைகளால் ஜீவனத்திடம் பேசுகிறார் ஈஸ்வரி. அப்போது ஜீவானந்தம் சட்டென உங்களிடம் தனியாக பேச வேண்டும் என கூற, ஆரம்பத்தில் ஈஸ்வரியின் தந்தை இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  பின்னர் அவரை சமாதானப்படுத்தி ஈஸ்வரி ஜீவானந்தத்திடம் தனியாக சென்று பேசுகிறார்.

47

ஈஸ்வரி கோவமான வார்த்தைகளை பேசும் போது, ஜீவானந்தம் ஈஸ்வரி இப்படி எல்லாம் கோவப்பட மாட்டாங்க என பேசிய உடன், ஈஸ்வரி காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் போது சுவற்றில் எழுச்சி வாசகங்களை எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நபரை பார்த்து, மனதிற்குள் அந்த நபரை நேசித்தாலும் வெளிப்படுத்த மாட்டார். அந்த நபருக்கும் ஈஸ்வரியை பிடித்து போகவே, ஈஸ்வரியின் அப்பாவிடம் வந்து நேரடியாக பெண் கேட்பார். ஆனால் அப்போது ஈஸ்வரியின் தந்தை தன்னுடைய பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுப்பது மட்டுமின்றி அந்த நபரை திட்டி வெளியே அனுப்பி விடுவார்.

கிழிந்த பாவாடையில் ஆட்டம் போட்ட தமன்னா! புது பாவாடை வாங்கிக்கொண்டு 'ஜெயிலர்' படம் பார்க்க வந்த பிரபலம்!

57

பின்னர் பணக்காரனான குணசேகரனுக்கு திருமணம் செய்து வைப்பார். அந்த  திருமணத்திற்கு பின்னர் அந்த நபரை நீங்கள் மறந்திருப்பீங்க, ஆனால் அந்த நபர் எங்காவது ஒரு இடத்தில் இருக்க தான் செய்வார். அவருடைய பெயர் ஜீவானந்தம் எனக்கூறி ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். ஜீவானந்தத்தின் வார்த்தைகளை கேட்டு ஈஸ்வரி தன்னை மீறி கண்ணீர் சிந்தி கொண்டிருக்கும் நேரத்தில், அங்கு வரும் ஈஸ்வரியின் தந்தை என்ன நடந்தது என கேட்டபோது, ஈஸ்வரி எந்த உண்மையையும் சொல்லாமல் காலம் பதில் சொல்லும் என கூறிவிட்டு அவர் கிளம்பி விட்டார் என கூறுகிறார்.

67

அடுத்தடுத்து என்னென்ன திருப்பங்கள் ஏற்படும் என்கிற எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்று வெளியாகி உள்ள புரோமோவில் வாசலில் அமர்த்தபடி ரேணுகா நந்தினி மற்றும் ஜனனி ஆகியோர் பேசிக்கொண்டிருக்கும் பொது  கதிர் மற்றும் ஞானம் காரில் அங்கு வர, அதை பார்த்து அவர்கள் ஜீவானந்தம் பார்த்து பயந்து போய் இப்படி வருகிறார்களா என கிண்டல் செய்கிறார். பின்னர் ரேணுகா சக்தியிடம் என்ன ஆனது என கேட்க, ஜீவானந்தத்தை பற்றி யாரிடம் விசாரித்தாலும் ஒரு வார்த்தை கூட கூற மாறுகிறார்கள் என சொல்கிறார். அதற்க்கு நந்தினி அந்த மாதிரி தயார் செய்து வைத்திருக்கிறார் என கூறுவதோடு இந்த புரோமோ முடிகிறது.

TRP-யில் அடித்து நொறுக்கி முன்னுக்கு வரும் விஜய் டிவி தொடர்! முதலிடத்தில் எந்த சீரியல் தெரியுமா?
 

77

ஜீவானந்தம் யார் என்கிற உண்மை ஈஸ்வரிக்கு மட்டுமே தற்போது தெரியும் நிலையில்... அதனை அவர் வெளிப்படையாக அனைவரிடத்திலும் கூறுவாரா? ஜீவனந்தத்துடனான சந்திப்புக்கு பின்னர் அவரின் மனநிலை எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved