- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Siragadikka Aasai : அருணை அடித்து நொறுக்கிய முத்து... மனோஜின் அடுக்கடுக்கான பொய்கள் அம்பலமாகுமா?
Siragadikka Aasai : அருணை அடித்து நொறுக்கிய முத்து... மனோஜின் அடுக்கடுக்கான பொய்கள் அம்பலமாகுமா?
Siragadikka Aasai Serial 27 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவை அடித்த அருணை வீடுதேடி சென்று அடிவெளுத்துள்ளார் முத்து. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை. முதலில் மனோஜ், கனகாவின் வீட்டிற்கு சென்று அவரது அம்மாவிடம் ஒரு பெரிய பொய்யை சொல்கிறார். "நீங்கள் கொடுத்த பணத்தை ரோகிணியிடம் கொடுத்துவிட்டேன். அவளும் விவாகரத்து ஆவணங்களில் கையெழுத்து போட்டுவிட்டாள். ஆனால் வழக்கறிஞர் கூறியதுபோல் விவாகரத்து முடியும் வரை எந்த பிரச்சனையும் வரக்கூடாது. அதனால் சாந்தி முகூர்த்தம் நடத்தக்கூடாது" என்று நம்ப வைக்கிறார். இதை முழுமையாக நம்பிய கனகாவின் அம்மா, மனோஜை ஆதரித்து பேசுகிறார்.
Siragadikka Aasai : டைவர்ஸ் கேட்ட மனோஜை அதிரவைத்த ரோகிணியின் பதில்... மீனாவுக்காக பதறிய முத்து...!
அருணுக்கு அதிர்ச்சி கொடுத்த முத்து
இதற்கிடையில் டியூட்டி முடிந்து அருண் வீட்டிற்கு வரும்போது, வீட்டு கதவு திறந்தே இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். உள்ளே சென்றதும் சோபாவில் அமைதியாக அமர்ந்திருக்கும் முத்துவை பார்த்து கோபத்தில் சீதாவை அழைக்கிறார். ஆனால் அதற்கு முத்து, "முதலில் சீதா இங்கே இருந்தால்தானே வருவாள்" என்று பதிலடி கொடுக்கிறார். அதன்பிறகு முத்து நேராக அருணிடம், "சீதாவை ஏன் அடித்தாய்?" என்று கேள்வி கேட்டு, உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எச்சரிக்கிறார். ஆனால் தன்னுடைய போலீஸ் அதிகார திமிரில் அருண் முத்துவை மிரட்ட முயற்சிக்கிறார்.
முத்துவிடம் அடிவாங்கிய அருண்
இதனால் கோபமடைந்த முத்து, அருணுக்கு தக்க பதிலடி கொடுத்து கீழே தள்ளுகிறார். தொடர்ந்து நடந்த சண்டையில் அருண் முற்றிலும் திணறிப் போகிறார். அப்போது அருண், "நான் போலீஸ்... உன்னை என்ன செய்கிறேன் பாரு" என்று மிரட்ட, அதற்கு முத்து, "ஒரு டிரைவர் ஒரு போலீஸ்காரனை அடித்தான் என்று புகார் கொடுத்தால் அது உனக்குத்தான் அவமானம்" என்று சொல்லி வாயடைக்க வைக்கிறார். மேலும், "சீதாவுக்கு நடந்த விஷயத்தை வைத்து போலீஸ் ஸ்டேஷன் சென்றிருந்தால், இந்நேரம் நீ லாக்கப்பில்தான் இருந்திருப்பாய்" என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
விஜயாவிடம் பொய் சொன்ன மனோஜ்
மறுபக்கம் வீட்டிற்கு வந்த மனோஜிடம் விஜயா, ரோகிணியை சந்தித்தாயா என்று கேட்கிறார். ஆனால் இங்கும் மனோஜ் பொய்யைத் தொடர்கிறார். "ரோகிணியை பார்க்கவே இல்லை. போன் செய்தேன், ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது" என்று சமாளிக்கிறார். விஜயாவைத் தவிர மற்ற அனைவரும் மனோஜ் ஏதோ மறைக்கிறார் என்று சந்தேகப்படுகிறார்கள். ஆனால் விஜயா மட்டும் மகனை கண்மூடித்தனமாக நம்புகிறார். இறுதியில், உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்று முத்து, அண்ணாமலையிடம் பேசுகிறார். ஆனால் மனோஜ், "இது என்னுடைய தனிப்பட்ட விஷயம். யாரும் இதில் தலையிட வேண்டாம்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார். இதனால் விரைவில் முத்துவும் மீனாவும் இணைந்து உண்மையை வெளிக்கொண்டு வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
அருணை திட்டிய சந்திரா
எபிசோடின் கடைசியில் அருண், சீதாவை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார். ஆனால் சீதா அவரது அழைப்பை ஏற்கவில்லை. இறுதியில் சீதாவின் அம்மா போனை எடுத்து, அருணை கடுமையாக கண்டிக்கிறார். அதே நேரத்தில் முத்துவின் செயலை பாராட்டி பேசுவதுடன் இன்றைய எபிசோடும் நிறைவடைகிறது. இதையடுத்து மனோஜின் பொய்கள் வெளிச்சத்திற்கு வருமா? முத்துவும் மீனாவும் உண்மையை கண்டுபிடிப்பார்களா? அருணுக்கு அடுத்ததாக என்ன நடக்கும்? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

