MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கரூர் சம்பவம் தொடர்பாக வாய் திறக்கும் விஜய்..? சிறப்பு பொதுக்குழுவில் பங்கேற்க குவிந்த நிர்வாகிகள்

கரூர் சம்பவம் தொடர்பாக வாய் திறக்கும் விஜய்..? சிறப்பு பொதுக்குழுவில் பங்கேற்க குவிந்த நிர்வாகிகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின்னர் முதல் முறையாக மாமல்லபுரத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். இன்றைய கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min read
Velmurugan s
Published : Nov 05 2025, 08:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
TVK விஜய்
Image Credit : Asianet News

TVK விஜய்

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிருத்தி தமிழக வெற்றி கழகத்தை விஜய் தொடங்கினார். விக்கிரவாண்டி, மதுரை மாநாட்டைத் தொடர்ந்து சனிக்கிழமைகள் தோறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொண்டார். திருச்சி, அரியலூர், திருவாரூர், நாமக்கல் என பல மாவட்டங்களில் வெற்றிகரமாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்தார். மேலும் அவருக்கு பொதுமக்கள் வழங்கிய வரவேற்பும் பிற அரசியல் கட்சிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

24
கரூர் சம்பவத்தால் முடங்கிய தவெக
Image Credit : Asianet News

கரூர் சம்பவத்தால் முடங்கிய தவெக

விஜய்யின் அரசியல் பயணம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில் கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கரூர் சம்பவத்திற்கு பின்னர் தவெக.வின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கிப்போனது.

Related Articles

Related image1
மக்களை பாதுகாக்க... Ex ஐஜி தலைமையில் புதிய குழுவை களத்தில் இறக்கிய தவெக தலைவர் விஜய்!
Related image2
பெண்கள் ரோட்டில் நடமாட முடியல..! தூக்கத்தில் இருந்து எழுந்திருங்க முதல்வரே..! அடித்து ஆடும் விஜய்!
34
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த விஜய்
Image Credit : Asianet News

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த விஜய்

கட்சியின் பொதுச் செயலாளர், இணை பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் தலைமறைவான நிலையில், தலைவர் விஜய் வீட்டிற்குள் தஞ்சம் அடைந்தார். ஒரு மாத காலமாக வீட்டை விட்டே வெளியே வராத விஜய் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதில் மட்டுமே தீவிரம் காட்டினார். அதன்படி பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் கட்சி சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணத்தொகை வரவு வைக்கப்பட்டது. அதன் பின்னர் கரூரில் இருந்து மாமல்லபுரம் அழைத்துவரப்பட்ட குடும்ப உறுப்பினர்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

44
கரூர் சம்பவம் தொடர்பாக பேசும் விஜய்..?
Image Credit : Asianet News

கரூர் சம்பவம் தொடர்பாக பேசும் விஜய்..?

இதனைத் தொடர்ந்து இன்று மாமல்லபுரத்தில் தவெக.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. கரூர் சம்பவத்திற்கு பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அழைப்பு கடிதம், அடையாள அட்டை இருந்தால் மட்மே நிர்வாகிகள் கூட்டத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)
அரசியல்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved