MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன குட் நியூஸ்! அன்புமணி வெளியிட்ட முக்கிய தகவல்!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன குட் நியூஸ்! அன்புமணி வெளியிட்ட முக்கிய தகவல்!

திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை இரு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

2 Min read
vinoth kumar
Published : Apr 20 2025, 10:10 AM IST| Updated : Apr 20 2025, 10:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tindivanam Krishnagiri 4 lane highway

Tindivanam - Krishnagiri 4 lane highway

திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை இரு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுபற்றி பாமக தலைவர் அன்புமணி எம்.பி.க்கு அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார். 

25
anbumani ramadoss

anbumani ramadoss

இரு வழிச்சாலை நான்கு வழிச்சாலை

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி டெல்லியில் சந்தித்து பேசினேன். திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து அவை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி விரிவான கடிதம்  எழுதியிருந்தேன்.

இதையும் படிங்க: திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த பாமக.! தமிழக அரசியலில் திடீர் எதிர்பாரா திருப்பம்
 

35
Accident

Accident

விபத்துகளை தவிர்க்க நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும்

திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை  இருவழிச்சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும்,  விபத்துகளைத் தவிர்க்க அதை நான்கு வழிச்சாலையாக  தரம் உயர்த்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியிருந்தேன்.

45
Nitin Gadkari

Nitin Gadkari

விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆணை

அதைத் தொடர்ந்து அமைச்சர் நிதின் கட்கரி எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை   நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆணையிட்டிருப்பதாகவும்,  திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன் அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: திலகபாமாவை அரைவேக்காடு விமர்சித்த வடிவேல் ராவணன்! மறுநாளே அன்புமணி செய்த சம்பவம்!

55
Thank you Anbumani to Nitin Gadkari

Thank you Anbumani to Nitin Gadkari

நிதின் கட்கரிக்கு அன்புமணி நன்றி

மத்திய அமைச்சரின் கடிதம் மிகுந்த மனநிறைவு அளிக்கிறது. எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை  நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கும் என்று நம்புகிறேன் என அன்புமணி கூறியுள்ளார்.
 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நிதின் கட்கரி
பிஜேபி
அரசியல்
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved