MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில்! 11 இடங்களில் சதம் அடித்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி!

பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில்! 11 இடங்களில் சதம் அடித்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் மே மாத தொடக்கத்தில் மழை பெய்த போதிலும், பள்ளிகள் திறக்கும் நேரத்தில் வெயில் மீண்டும் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. 

2 Min read
vinoth kumar
Published : Jun 02 2025, 08:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சுட்டெரித்த வெயில்
Image Credit : Asianet News

சுட்டெரித்த வெயில்

தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் கோடை மற்றும் கத்திரி வெயில் எப்படி இருக்குமோ என பொதுமக்கள் பீதி அடைந்தனர். கோடை வெயில் தொடங்கியது முதலே பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெயில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். மேலும் சுகாதாரத்துறையும் கர்ப்பிணி மற்றும் வயதானவர்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.

25
கத்திரி வெயில் பரவலாக மழை
Image Credit : Google

கத்திரி வெயில் பரவலாக மழை

இந்நிலையில் மே 4ம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்கியது முதலே தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. இதனிடையே தென்மேற்கு பருவமழையும் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து கேரளாவை ஓட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

Related Articles

Related image1
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படும் இடங்கள் இதுதான்!
Related image2
ஷாக்கிங் நியூஸ்! சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு இளைஞர் பலி!
35
11 இடங்களில் வெயில் சதம்
Image Credit : our own

11 இடங்களில் வெயில் சதம்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக குளிர்ச்சியான சூழல் நிலவி வந்த நிலையில் பள்ளி திறக்கும் நேரத்தில் நேற்று முதல் வெயில் சுட்டெரித்து வருவது குழந்தைகளின் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 11 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

45
பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மீண்டும் வெயில்
Image Credit : our own

பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மீண்டும் வெயில்

அதாவது மதுரை விமான நிலையத்தில் 105.26 டிகிரி, வேலூரில் 104 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 102.02 டிகிரி, மதுரை நகரத்தில் 102.56 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், கடலூர், ஈரோடு, பரங்கிப்பேட்டை, புதுச்சேரியில் 101 டிகிரி, திருச்சி, திருத்தணி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கும் நிலையில் இன்றும் வெயில் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரிக்கும் என கூறப்படுகிறது.

55
மிதமான மழைக்கு வாய்ப்பு
Image Credit : Google

மிதமான மழைக்கு வாய்ப்பு

இதனிடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றம் காரைக்கால் பகுதிகளிலும் இடி. மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
கனமழை
பள்ளி மாணவர்
பள்ளி
தமிழ்நாடு வானிலை அறிக்கை
வெப்ப அலை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved