MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பாமக நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை.! சரவெடியாக சீறிய ராமதாஸ்

பாமக நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை.! சரவெடியாக சீறிய ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கட்சிப் பதவிகள் மற்றும் அதிகாரம் தொடர்பான மோதல் தீவிரமடைந்துள்ளது. இருவரும் ஒருவரையொருவர் கட்சியிலிருந்து நீக்கி வருவதோடு, கட்சி இரண்டாகப் பிளவுபடும் சூழல் உருவாகியுள்ளது. 

2 Min read
Ajmal Khan
Published : Jul 03 2025, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அதிகார போட்டியில் தந்தை மகன் மோதல்
Image Credit : Asianet News

அதிகார போட்டியில் தந்தை- மகன் மோதல்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திரைமறைவில் நடைபெற்று வந்த மோதல் நிர்வாகிகள் மத்தியில் வெளிப்படையாக தெரிந்தது. புதுச்சேரியில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தான், ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தன் பரசுராமனை இளைஞரணி தலைவராக நியமித்தார். 

இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முகுந்தனுக்கு கட்சி அனுபவம் இல்லை எனவும், இந்த நியமனம் ஏற்க முடியாது எனவும் அனைவர் முன்னிலையிலும் கூறினார். இதனால் மேடையிலேயே இருவருக்கும் காரசார வாக்குவாதம் ஏற்பட்டு, தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு உருவானது.

24
ராமதாஸ்- அன்புமணி மோதல்
Image Credit : Asianet News

ராமதாஸ்- அன்புமணி மோதல்

அப்போது பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "நான் உருவாக்கிய கட்சி, நான் சொல்வதுதான் நடக்கும்" என்று கூறி, உடன்படாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம் எனத் ஆவேசமாக அறிவித்தார். இதற்கு உடனடியாக மேடையிலேயே பதில் அளிக்கும் வகையில் மைக்கை பிடித்த அன்புமணி, சென்னை பனையூரில் தனது அலுவலகத்துக்கு வரலாம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே மோதலையடுத்து சமாதானப்படுத்த முயற்சி செய்யப்பட்டது. அப்போது சிறிய அளவில் சமாதானம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் திடீரென செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்,

தன்னை பாமகவின் தலைவராக அறிவித்தார், அதேநேரம் அன்புமணியை செயல் தலைவராக செயல்படுவார் என கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, தான் முறைப்படி பொதுக்குழுவால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என பதிலடி கொடுத்தார். இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதால்ல பாமக இரண்டாக பிளவு பட்டது.

Related Articles

Related image1
ஹிட்லர், முசோலினி, இடிஅமீனை மிஞ்சிய ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சி.! இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்
Related image2
சாத்தான்குளத்தில் 2 பேர் உயிரிழந்தபோது நீதி எங்கே போனது இபிஎஸ்? கூவத்தூருக்கா! ஆர்.எஸ்.பாரதி சரவெடி!
34
சுற்றுப்பயணத்தை தொடங்கும் ராமதாஸ்
Image Credit : our own

சுற்றுப்பயணத்தை தொடங்கும் ராமதாஸ்

ராமதாஸ் ஆதரவாளர்கள் ஒரு பக்கமும் அன்புமணி ஆதரவாளர்கள் ஒரு பக்கம் என தனி அணியாக நின்றனர். இதனால் அன்புமணிக்கு ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் மாறி மாறி பதவி மற்றும் கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர். ஒரு கட்டத்தில் ராமதாஸ் வயது முதிர்வால் "குழந்தைபோல்" மாறிவிட்டதாகவும், சிலர் அவரை சுயலாபத்திற்காகப் பயன்படுத்துவதாகவும் அன்புமணி குற்றம்சாட்டினார். 

அன்புமணியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில், ராமதாஸ் தனது உடல் திறனையும், கட்சி பணியாற்றும் திறனையும் நிரூபிக்க, ஜூலை 10, 2025 அன்று கும்பகோணத்தில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த மோதலால் ராமதாஸ் ஆதரவாளராக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணி அறிவிப்பு வெளியிட்டார். 

44
நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை
Image Credit : google

நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை

ஆனால் அன்புமணிக்கு நிர்வாகிகளை நீக்க அதிகாரம் இல்லையென சரவெடியாக வெடித்துள்ளார். எம்.எல்.ஏ. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லையெனவும் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது என திட்டவட்டம் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், பாமகவில் நிர்வாகிகளை நீக்க எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பா.ம.க. கொறடாவாக அருள் உள்ளார். ஜி.கே.மணி மூலம் கடிதம் கொடுத்த பிறகுதான் நீக்க முடியும். எனது மனம் வேதனைப்படும் அளவுக்கு செய்திகள் வருகின்றன.

எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு கட்சியை நான் நடத்தி வருகிறேன் என ராமதாஸ் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக- அதிமுகவுடன் கூட்டணி பேசி வருவதாக வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி தான். பாமக செயற்குழு பொதுக்குழு கூடி தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு செய்யும் என அறிவித்தார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
அரசியல்
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
இராமதாஸ்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved