MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Teacher Protest : பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.! களத்தில் இறங்கிய தட்டச்சு ஆசிரியர்கள்

Teacher Protest : பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.! களத்தில் இறங்கிய தட்டச்சு ஆசிரியர்கள்

தமிழகத்தில் 2027 முதல் தட்டச்சுத் தேர்வுகள் கணினி மூலம் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு, 5,000 தட்டச்சுப் பள்ளிகள் மற்றும் 5 இலட்சம் ஆசிரியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Jun 11 2025, 12:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தட்டச்சு பள்ளி ஆசிரியர்கள்
Image Credit : Asianet News

தட்டச்சு பள்ளி ஆசிரியர்கள்

தட்டச்சுத் தேர்வுகள் பல ஆண்டுகாலத்திற்கும் மேலாக தட்டச்சுப் பொறியின் வாயிலாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பள்ளிக் கல்வித் துறைதான் தட்டச்சு-சுருக்கெழுத்துத் தேர்வுகளை தொடர்ந்து நடத்தி வந்தது. இதனையடுத்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தட்டச்சு-சுருக்கெழுத்துத் தேர்வுகளை நடத்தி வருகிறது.

 தமிழகத்தில் சுமார் 5,000 தட்டச்சுப் பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 4,000 தட்டச்சுப் பள்ளிகளில் கணினி (COA தேர்வுக்காக) வகுப்புகளும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் அறிவுறுத்தலால் நடைபெற்று வருகின்றன.

24
வேலை இழக்கும் தட்டச்சு ஆசிரியர்கள்
Image Credit : GOOGLE

வேலை இழக்கும் தட்டச்சு ஆசிரியர்கள்

இந்த நிலையில் தமிழகத்தில் இன்னும் சில தேர்வுகளுக்கு மட்டும் தட்டச்சு இயந்திரங்கள் மூலமாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் நடைபெறும் தட்டச்சுத் தேர்வுகள் தட்டச்சு இயந்திரங்கள் மூலம் நடைபெறும் எனவும், 2027-ஆம் ஆண்டு முதல் கணினி பயன்பாட்டில் மட்டுமே நடத்தப்படும் என்கிற அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக தமிழகத்திலுள்ள தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற சுமார் 5,000 தட்டச்சுப் பள்ளிகளையும், 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

Related Articles

Related image1
2299 கிராம உதவியாளர் பணியிடங்கள்.! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்
Related image2
மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு
34
தட்டச்சுக்கு பதில் கணினியில் தேர்வு
Image Credit : Asianet News

தட்டச்சுக்கு பதில் கணினியில் தேர்வு

தமிழகத்தில் உள்ள சுமார் 5,000 தட்டச்சுப் பள்ளிகளில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தட்டச்சுப் பொறிகளும், 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட கணினிகளும் உள்ளன. தமிழக அரசின் இந்த முடிவால் அனைவரும் நடுத் தெருவிற்குத் தள்ளப்பட உள்ளனர். இதனையடுத்து சென்னையில் வணிகவியல் பள்ளியல் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது.

 மாநில தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். தட்டச்சுத் தேர்வினை சுமார் 5,000 அங்கீகாரம் பெற்ற தட்டச்சுப் பள்ளிகளின் 2 இலட்சம் தட்டச்சு இயந்திரங்கள் மூலமாக மட்டுமே தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எப்பொழுதும் போல் நடத்திட வேண்டும். தனியாரை ஊக்குவிக்க முயற்சிக்க வேண்டாம்.

44
சென்னையில் களத்தில் இறங்கிய தட்டச்சு ஆசிரியர்கள்
Image Credit : Asianet News

சென்னையில் களத்தில் இறங்கிய தட்டச்சு ஆசிரியர்கள்

தட்டச்சுப் பள்ளிகள் எங்கிற வார்த்தையையே நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சுப் பள்ளிகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கி COA (கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன்) கணினித் தேர்வினை நடத்திடவும், குறைந்தபட்ச கல்வித் தகுதியான தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை/முதுநிலை தேர்ச்சி பெற்றவர்களையே COA தேர்விற்கு அனுமதிக்க வேண்டும் எனவும், புதிய தேர்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
தமிழ்நாடு அரசு
ஆசிரியர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image2
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Recommended image3
ரூ.70,000 ஊக்கத்தொகை முதல் ஒரு லட்சம் பரிசுத் தொகை வரை.! லிஸ்ட் போட்ட தமிழக அரசு
Related Stories
Recommended image1
2299 கிராம உதவியாளர் பணியிடங்கள்.! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்
Recommended image2
மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved