MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs ENG Test: இந்தியா தோல்விக்கான '3' காரணங்கள் இதுதான்! 4வது டெஸ்ட்டில் என்ன மாற்றம் வேண்டும்?

IND vs ENG Test: இந்தியா தோல்விக்கான '3' காரணங்கள் இதுதான்! 4வது டெஸ்ட்டில் என்ன மாற்றம் வேண்டும்?

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்? 4வது டெஸ்ட்டில் இந்திய அணி என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

3 Min read
Rayar r
Published : Jul 15 2025, 11:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
What Is The Reasons For India's Defeat In The 3rd Test Against England
Image Credit : Getty

What Is The Reasons For India's Defeat In The 3rd Test Against England

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஜடேஜாவின் (61 ரன்கள்) போராட்டம், அவருக்கு பும்ரா, சிராஜ் பேட்டிங் ஒத்துழைப்பு இருந்தபோதிலும் கடைசியில் இந்தியாவால் வெற்றிக் கனியை பறிக்க முடியவில்லை. 

இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி இந்த தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் 23ம் தேதி தொடங்குகிறது. 3வது டெஸ்ட்டில் இந்திய அணியின் தோல்விக்கு காரணங்கள் என்னென்ன? 4வது டெஸ்ட்டில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

26
கருண் நாயரின் மோசமான பேட்டிங்
Image Credit : ANI

கருண் நாயரின் மோசமான பேட்டிங்

3வது டெஸ்ட்டில் இந்திய அணியின் தோல்விக்கு 2வது இன்னிங்சில் ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டும் சொதப்பியதே முக்கிய காரணம். இதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவர் கருண் நாயர். முதல் இன்னிங்சில் 40 ரன்கள் அடித்த கருண் நாயர். 2வது இன்னிங்சில் 14 ரன்னில் அவுட் ஆனார்.

 அதுவும் 2வது இன்னிங்சில் அவர் பந்தை அடிக்காமல் விட்டு எல்பிடபிள்யூ ஆன விதம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  விராட் கோலியின் இடத்தில் களமிறங்கும் கருண் நாயர் இந்த தொடர் முழுவதும் சொதப்பி வருகிறார். முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆன இவர் 2வது இன்னிங்சில் 20 ரன்னில் அவுட் ஆனார்.

Related Articles

Related image1
கடைசி வரை திக் திக் திக்! 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி! போராடிய ஜடேஜா! பும்ரா, சிராஜ் அசத்தல்!
Related image2
கருண் நாயர் வேஸ்ட்! டீம்ல இருந்து தூக்குங்க! தமிழக வீரரை சேருங்க! ரசிகர்கள் ஆவேசம்!
36
கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சன் வேண்டும்
Image Credit : Getty

கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சன் வேண்டும்

2வது டெஸ்ட்டிலும் 31 மற்றும் 21, 3வது டெஸ்ட்டில் 40 மற்றும் 14 என சொதப்பலான பேட்டிங் ஆடியுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய காரணத்தால் கருண் நாயருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் கிடைத்த வாய்ப்புகளை வீணடித்து விட்டார். இவரது மோசமான பார்ம் இந்திய அணியையும் பாதிக்கிறது. அதே வேளையில் முதல் டெஸ்ட்டில் அறிமுகமாகி சரியாக விளையாடாத முதல் இன்னிங்சில் 0, 2வது இன்னிங்சில் 30) தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் நீக்கப்பட்டார்.

 அவருக்கு கடந்த இரண்டு டெஸ்ட்டிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் முதல் டெஸ்ட்டில் சொதப்பிய கருண் நாயருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கிய போதிலும் அவர் சொதப்பி வருகிறார். ஆகவே 4வது டெஸ்ட்டில் கருண் நாயரை நீக்கி விட்டு அவரது இடத்தில் சாய் சுதர்சனை சேர்த்தால் இந்திய அணியின் பேட்டிங் பலமடையும்.

46
ஜெய்ஸ்வாலின் தவறான ஷாட்
Image Credit : Getty

ஜெய்ஸ்வாலின் தவறான ஷாட்

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் ஜெய்ஸ்வால். முதல் டெஸ்ட்டில் ஒரு சதம், 2வது டெஸ்ட்டில் அரை சதம் அடித்த ஜெய்ஸ்வால் 3வது டெஸ்ட்டின் முக்கியமான கட்டத்தில் ரன் அடிக்கவில்லை. முதல் இன்னிங்சில் 13 ரன்னும், 2வது இன்னிங்சில் டக் அவுட்டும் ஆனார். 

அதிலும் 2வது இன்னிங்சில் ஆர்ச்சரில் பவுன்ஸில் ஷாட் அடித்து அவர் அவுட் ஆன விதம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆகவே அடுத்த டெஸ்ட்டில் ஜெய்ஸ்வாலை உட்கார வைத்து விட்டு இந்திய அணிக்காக வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

56
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட் மற்றும் காயம்
Image Credit : Getty

ரிஷப் பண்ட்டின் ரன் அவுட் மற்றும் காயம்

இது தவிர 3வது டெஸ்ட்டில் இந்திய அணியின் தோல்விக்கு ரிஷப் பண்ட் ரன் அவுட்டும் ஒரு காரணமாகும். முதல் இன்னிங்சில் இந்தியா 248/3 என நல்ல நிலையில் இருந்தபோது ரிஷப் பண்ட் கே.எல்.ராகுல் சதம் அடிப்பதற்காக ஒரு ரன் ஓடி தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இது ஆட்டத்தின் திருப்பு முனையாகி அடுத்து இந்தியா 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆகாமல் இருந்தால் இந்தியா முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்று எளிதாக இந்த போட்டியை வென்றிருக்கலாம். 

இதேபோல் ரிஷப் பண்ட்டின் காயமும் தோல்விக்கு ஒரு காரணமாகி விட்டது. விக்கெட் கீப்பிங் செய்யும்போது விரலில் காயம் அடைந்த அவர் முதல் இன்னிங்சில் காயத்துடன் 74 ரன்கள் அடித்தார். ஆனால் 3வது இன்னிங்சில் அவரால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனால் எளிதாக தனது விக்கெட்டை ஆர்ச்சருக்கு தாரை வார்த்தார்.

66
4வது டெஸ்ட்டில் என்னென்ன மாற்றம் வேண்டும்?
Image Credit : Getty

4வது டெஸ்ட்டில் என்னென்ன மாற்றம் வேண்டும்?

இந்திய அணி மான்செஸ்டரில் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. நாம் மேலே சொன்னபடி இந்த போட்டியில் கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சன் இடம்பெற வேண்டும். பும்ரா விளையாடாவிட்டால் அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்குக்கு வாய்ப்பளிக்க வேண்டும். 

ஜெய்ஸ்வாலை உட்கார வைத்து விட்டு அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். மற்றபடி 3வது டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் தொடர வேண்டும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved