MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Fruits : பழங்கள் சாப்பிட்டதும் இதை மட்டும் பண்ணாதீங்க!! பலர் பண்ற தவறு இதுதான்

Fruits : பழங்கள் சாப்பிட்டதும் இதை மட்டும் பண்ணாதீங்க!! பலர் பண்ற தவறு இதுதான்

பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதால் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1 Min read
Author : Kalai Selvi
Published : Sep 08 2025, 04:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Fruit and Water Timing
Image Credit : Getty

Fruit and Water Timing

பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனால் தான் தினமும் ஏதாவது ஒரு பழம் சாப்பிட வேண்டுமென்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இருப்பினும் பழங்களை சாப்பிட்ட பிறகு பலர் செய்யும் ஒரு பொதுவான தவறு ஒன்று உள்ளது. அது என்னவென்றால், பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது. இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இப்படி பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்து வந்தால் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறித்து இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.

25
செரிமான பிரச்சனைகள் :
Image Credit : Getty

செரிமான பிரச்சனைகள் :

பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் செரிமானம் மெதுவாகும். அஜீரணம், அமிலத்தன்மை, வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் பழங்களில் இருந்து ஊட்டச்சத்துக்களை உடல் சரியாக உறிஞ்சுவது தடுக்கப்படும். இதன் விளைவாக உடலுக்கு முழு நன்மைகளும் கிடைக்காமல் போகும். குறிப்பாக ஆரஞ்சு, திராட்சை போன்ற புளிப்பு பழங்களில் இந்த பிரச்சனை ரொம்பவே அதிகமாக ஏற்படும்.

Related Articles

Related image1
Fruits: இரவில் இந்தப் பழங்களை சாப்பிட்டால் நல்லதல்ல: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
Related image2
Seedless Fruits : விதையில்லா பழங்களை விரும்பி சாப்பிடுவீர்களா? இதை படியுங்கள் முதலில்
35
உடலில் pH அளவில் மாற்றம்
Image Credit : Getty

உடலில் pH அளவில் மாற்றம்

பழங்களை சாப்பிட்டு உடனே தண்ணீர் குடித்தால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். இதனால் உடலில் pHஅளவு குறைந்து விடும். மேலும் சில பழங்களில் ஏற்கனவே நீர்ச்சத்தைக் கொண்டிருப்பதால் அத்தகைய பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் நீர்ச்சத்தை மேலும் அதிகரிக்கும். சில சமயம் வாந்தி கூட வரும்.

45
இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்
Image Credit : Getty

இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்

பழங்கள் சாப்பிட்டு உடனேயே தண்ணீர் குடித்தால் செரிமானம் மெதுவாகி, உடலில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு அல்லது சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு ஆபத்து. எனவே சர்க்கரை நோயாளிகள் பழங்களை சாப்பிட்ட உடனே ஒருபோதும் தண்ணீர் குடிக்க வேண்டாம்.

55
சளி மற்றும் இருமல்
Image Credit : freepik

சளி மற்றும் இருமல்

பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் உடலில் சளி, இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே பழங்களை சாப்பிட்டு சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
பழங்களின் ஆரோக்கிய நன்மைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Related Stories
Recommended image1
Fruits: இரவில் இந்தப் பழங்களை சாப்பிட்டால் நல்லதல்ல: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
Recommended image2
Seedless Fruits : விதையில்லா பழங்களை விரும்பி சாப்பிடுவீர்களா? இதை படியுங்கள் முதலில்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved