MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • ஹெல்த் டிப்ஸ்: தூக்க மாத்திரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்!

ஹெல்த் டிப்ஸ்: தூக்க மாத்திரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்!

இப்போதெல்லாம் பலர் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் தூக்க மாத்திரைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் தூக்க மாத்திரைகள் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 22 2023, 03:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

மோசமான வாழ்க்கை முறை, மன அழுத்தம், பதட்டம் போன்ற உளவியல் பிரச்சனைகள் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். அதனால்தான் பலர் தூங்குவதற்கு தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், தூக்க மாத்திரைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் யாராவது அதற்கு அடிமையானால், அவர்களால் அதை பயன்படுத்தாமல் தூங்கவே முடியாது. ஆனால் தூக்க மாத்திரைகள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். குறிப்பாக, இது உங்கள் தூக்கத்தின் தரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
 

27
அடிமை:

அடிமை:

தூக்க மாத்திரைகளை எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறீர்களோ, அந்த அவ்வளவுக்கு நீங்கள் அதற்கு அடிமையாகிவிடுவீர்கள். இவற்றை தொடர்ந்து உட்கொள்பவர்கள் எளிதில் அடிமையாகி விடுவார்கள். இதனால் இந்த மாத்திரைகளை சாப்பிட்டு பழக்கப்பட்டவகளால் மாத்திரையை சாப்பிடாமல் தூங்கவே முடியாது.  ஆரோக்கியமாக இருக்க இவற்றை தவிர்த்து விடுவது நல்லது என்று நிபுணர்கள் கூறினர். 

37
பக்க விளைவுகள்:

பக்க விளைவுகள்:

நிபுணர்களின் கூற்றுப்படி.. தூக்க மாத்திரைகள் விரைவில் தூங்க உதவுகின்றன. ஆனால் இது தூக்கத்தின் தரத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. அதாவது தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் சாதாரண மக்களை விட அதிகமாக தூங்கினாலும் அவர்களின் உடலும் மூளையும் முழுமையாக ஓய்வெடுக்காது. இதன் காரணமாக அவர்கள் விழித்தபின் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க மாட்டார்கள்.

 தூக்க மாத்திரைகளை தவறாமல் உட்கொள்வது தலைச்சுற்றல், தூக்கமின்மை, தலைவலி, வாய் வறட்சி மற்றும் பல செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். தூக்க மாத்திரைகளை உட்கொள்வதால் பகலில் தூக்கம் வரலாம். 

47
மாத்திரை அளவு அதிகரிப்பு:

மாத்திரை அளவு அதிகரிப்பு:

முதலில் தூக்க மாத்திரைகளை சிறிதளவு உட்கொண்டாலும், விரைவில் தூங்கிவிடுவார். ஆனால் உங்கள் உடல் அவற்றிற்கு அடிமையாகிவிட்டால், மருந்தின் அளவை அதிகரிக்கும் வரை நீங்கள் தூங்க முடியாது. இது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. ஒரு கட்டத்தில் உடல் பழகிய பிறகு தூக்க மாத்திரைகளின் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும். 

57
ஆபத்து:

ஆபத்து:

தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தூக்கத்தின் தரத்தை மோசமாக பாதிக்கும். இதனால் தூக்கமின்மை ஏற்படுகிறது. இது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மனநலம் பாதிக்கிறது. குறிப்பாக வயதானவர்கள். இதனால் கீழே விழுந்து காயமடையும் அபாயம் உள்ளது.
 

67
ஒவ்வாமை:

ஒவ்வாமை:

சிலருக்கு தூக்க மாத்திரைகள் அலர்ஜியாக இருக்கலாம். தூக்க மாத்திரைகளை உட்கொள்வது அரிப்பு, படை நோய் மற்றும் பிற வகையான ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். 

 

இதையும் படிங்க: குண்டா இருக்கீங்கனு கவலையா?... அப்போ இதை கசாயமா செஞ்சு குடிங்க..! எடை தானா குறையும்...

 

77
செரிமான பாதிப்பு:

செரிமான பாதிப்பு:

தூக்க மாத்திரைகளை உட்கொள்வது செரிமானத்தை மோசமாக பாதிக்கும். இதனால் மலச்சிக்கல், அஜீரணம், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Recommended image2
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Recommended image3
இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved