- Home
- உடல்நலம்
- High Blood Pressure : உயர் இரத்த அழுத்தமா? இந்த விஷயங்களை தவறாம செஞ்சா கட்டுக்குள் இருக்கும்
High Blood Pressure : உயர் இரத்த அழுத்தமா? இந்த விஷயங்களை தவறாம செஞ்சா கட்டுக்குள் இருக்கும்
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தற்போது உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புகைப்பிடித்தல், உடல் பருமன், மோசமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, அதிகமாக மது அருந்துதல், மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இது தவிர மரபியல், வயது மூப்பு மற்றும் சில மருந்துகளில் விளைவுகளாலும் இது ஏற்படும். இதை சரியாக கவனிக்காவிட்டால் மாரடைப்பு பக்கவாதம் சிறுநீரக நோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும். ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்தால் போதும். அதை சுலபமாக கட்டுப்படுத்தி விடலாம். அவை என்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியது :
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் முருங்கை இலை ஜூஸ் குடிக்க வேண்டும். இதற்கு ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு முருங்கை இலை, சின்ன வெங்காயம் மற்றும் வெந்தயத்தை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து விட்டு பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும். இதில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் மற்றும் உடல் எடையையும் கணிசமாக குறைக்கும்.
அதுபோல காலையில் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக கிரீன் டீ குடிக்க வேண்டும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு ஏற்படுத்தும் இதை நோய் பாதிப்பை தவிர்க்க உதவும்.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் தங்களது உணவில் மஞ்சள் தூள், இலவங்கப்பட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
அதுமட்டுமல்லாமல் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும். மேலும் தினமும் சுமார் அரை மணி நேரமாவது கண்டிப்பாக வாக்கிங், ஜாக்கிங் போன்ற கார்டியோ பயிற்சிகளை செய்ய வேண்டும்.