இதய நோய் வரும் முன் காட்டும் 7 ஆரம்ப அறிகுறிகள்! அலட்சியப்படுத்தாதீங்க!
மாறிவரும் இன்றைய காலகட்டத்தில், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். பல நேரங்களில், இதய நோய் திடீரென்று ஏற்படுவதில்லை; அது வருவதற்கு முன்பே நம் உடல் சில ஆரம்ப அறிகுறிகளை (early warning signs) வெளிப்படுத்தத் தொடங்கும்.

நெஞ்சுப் பகுதியில் அசௌகரியம் :
வேலை செய்யும் போதோ அல்லது நடக்கும் போதோ நெஞ்சுப் பகுதியில் ஒருவித அழுத்தம், பாரம் அல்லது இறுக்கம் போன்ற உணர்வு ஏற்பட்டால், அதை அலட்சியப்படுத்த வேண்டாம். இது இதய நோய் வருவதற்கான முதல் மற்றும் முக்கிய அறிகுறியாகும்.
மூச்சுத் திணறல் :
வழக்கமாகச் செய்யும் எளிய வேலைகளைச் செய்யும் போதே அல்லது சாதாரணமாக ஓய்வெடுக்கும் போது கூட மூச்சு வாங்குவது போல இருந்தால், இதயம் சீராக இரத்தத்தை பம்ப் செய்யவில்லை (pump efficiently) என்று அர்த்தம்.
வழக்கத்திற்கு மாறான சோர்வு :
நல்ல உறக்கம் மற்றும் ஓய்விற்குப் பிறகும் தொடர்ந்து உடம்பில் கடுமையான சோர்வு இருப்பதும், திடீரென ஆற்றல் (energy) குறைவது போல் தோன்றுவதும் இதயக் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம்.
உடலின் பிற பகுதிகளில் வலி :
இதயம் தொடர்பான வலி நெஞ்சுப் பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இது சில நேரங்களில் உங்களது கைகள், கழுத்து, தாடை (jaw) அல்லது முதுகுப் பகுதிக்கும் பரவக்கூடும்.
சீரற்ற இதயத் துடிப்பு :
இதயம் திடீரென மிக வேகமாகத் துடிப்பது போன்ற உணர்வு (palpitations) அல்லது நெஞ்சுக்குள் படபடப்பு அடிக்கடி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதிப்பது நல்லது.
கால்களில் வீக்கம் :
இதயச் செயல்பாடுகளில் தொய்வு ஏற்படும் போது, உடலின் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால், உடலின் கீழ் பகுதிகளான கால் பாதங்கள், கணுக்கால் மற்றும் கால்களில் நீர் கோர்த்து வீக்கம் ஏற்படலாம்.
மயக்கம் அல்லது தலைச்சுற்றல் :
இதயத்தால் மூளைக்குத் தேவையான அளவு இரத்தத்தை சீராக அனுப்ப முடியாத போது, திடீரென தலைச்சுற்றுவது போன்றோ, நிலை தடுமாறுவது போன்றோ அல்லது மயக்கம் வருவது போன்றோ தோன்றும்.

