- Home
- உடல்நலம்
- உடற்பயிற்சி
- Walking Tips: இரவு சாப்பிட்ட பிறகு 10 நிமிஷம் நடந்தால் இத்தனை நன்மைகளா? உடம்பில் நடக்கும் அந்த ‘மேஜிக்’
Walking Tips: இரவு சாப்பிட்ட பிறகு 10 நிமிஷம் நடந்தால் இத்தனை நன்மைகளா? உடம்பில் நடக்கும் அந்த ‘மேஜிக்’
Walking Tips: உடல் எடை அதிகரித்து கொண்டே செல்கிறது என கவலைப்படுகிறீர்களா? தினமும் இரவு சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் ஏராளமான நன்மைகள் உள்ளன. அது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

Walking Tips; இரவு சாப்பிட்டதும் நடந்தால் இத்தனை நன்மைகளா?
தினமும் இரவு உணவிற்குப் பிறகு ஒரு 10 நிமிடங்கள் நடப்பதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. சாப்பிட்ட உடனே நடப்பதன் மூலம் அசிடிட்டி மற்றும் செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். இது உடலில் உள்ள கலோரிகளை எரித்து, உடல் எடை குறையவும் உதவுகிறது. நாம் சாப்பிட்ட உணவு கொழுப்பாக மாறாமல் தடிப்பதற்கும் இந்த நடைப்பயிற்சி மிகவும் அவசியமானதாகும்.
மேம்பட்ட செரிமானம்
சாப்பிட்ட பிறகு நடக்கும்போது, வயிற்றில் இருக்கும் உணவு விரைவாக நகரத் தொடங்குகிறது. இதனால் செரிமான செயல்முறை இன்னும் திறமையாக நடைபெறுகிறது. இந்த நடைப்பயிற்சி குடல் இயக்கத்தைத் தூண்டி, வயிறு உப்பசம், நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கிறது. உடலுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்காமல், செரிமான மண்டலம் தனது வேலையைச் சரியாகச் செய்ய இந்தச் சிறிய நடைப்பயிற்சி பெரிதும் உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு
இரண்டாவது முக்கியமான காரணம், இரத்த சர்க்கரையின் அளவை இது சீராக வைக்கிறது. சாப்பிட்ட பிறகு சும்மா அமர்ந்திருப்பதை விட, வெறும் 10 நிமிடங்கள் நடந்தால் கூட, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிப்பதைக் (குறைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இரவு உணவிற்குப் பின் எந்தவொரு உடற்பயிற்சியும் செய்யாமல் அப்படியே படுத்துவிட்டால், உடல் பருமன் அதிகரிப்பதுடன் உடலில் குளுக்கோஸ் அளவும் கூடிவிடும்.
ஆழந்த உறக்கம்
கொஞ்ச நேரம் நடந்துவிட்டுத் தூங்கச் சென்றால், அது செரிமானத்திற்கு நல்லது செய்வதுடன், ஆழ்ந்த தூக்கத்திற்கும் வழிவகுக்கும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தினமும் இதனைச் செய்து பார்த்தால் நல்ல பலன் கிடைக்கும். உடல் எடை அதிகரிக்காமல் இருக்க இது ஒரு சிறந்த, எளிமையான வழியாகும். இந்த ஆய்வை ஒடாகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதய ஆரோக்கியம்
இரவு உணவிற்குப் பின் நடப்பது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுவதால் இதய நோய்கள் வரும் அபாயம் குறைகிறது.
மன அழுத்தம் குறைதல்
நடக்கும்போது உடம்பில் 'எண்டோர்பின்' எனப்படும் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது நாள் முழுவதும் இருந்த மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதிப்படுத்த உதவும்.
வளர்சிதை மாற்றம் அதிகரிப்பு
சாப்பிட்ட உடனே நடப்பது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை உயர்த்துகிறது. இதனால் நாம் தூங்கும் போதும் உடல் கலோரிகளைத் தொடர்ந்து எரித்துக் கொண்டே இருக்கும்.
இரத்த அழுத்தம் சீராகும்
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இரவு உணவிற்குப் பின் லேசாக நடப்பது, அவர்களின் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும் என பல ஆய்வுகள் கூறுகின்றன.
முக்கிய குறிப்பு: இரவு உணவிற்குப் பின் வேகமாக ஓடவோ அல்லது கடினமான உடற்பயிற்சிகளையோ செய்யக் கூடாது. மிதமான வேகத்தில் மட்டுமே நடக்க வேண்டும்.

