Dharshana Marriage: பிரபல சீரியல் நடிகை தர்ஷனா அசோகனுக்கு திருமணம் முடிந்தது! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
ஜீ தமிழ் சீரியலில் 'நீ தானே என் பொன்வசந்தம்', 'கனா' ஆகிய சீரியல்களில் நடித்த தர்ஷனா அசோகன் இன்று தன்னுடைய நீண்ட நாள் காதலரை கரம்பிடித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'கனா'. இந்த சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. திங்கள் முதல்.. சனிக்கிழமை வரை, மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. கிராமத்தை சேர்ந்த கதாநாயகி தன்னுடைய லட்சியத்தை அடைய தடைகளை தகர்த்தெறிந்து, போராடி தன்னுடைய வாழ்க்கையிலும், விளையாட்டிலும் எப்படி ஜெயிக்கிறார் என்பதே இந்த சீரியலின் கதைக்களம்.
இந்த தொடரில் கதாநாயகியாக தர்ஷனா அசோகன் நடித்து வந்தார். சமீபத்தில் தன்னுடைய திருமணத்திற்காக சீரியலில் இருந்து விளங்குவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் தர்ஷனாவுக்கும், அவரின் காதலர் அபிஷேக் என்பவருக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தமிழர் பாரம்பரிய மல்லர் கம்ப கலையில் கலக்கும் ராகவா லாரன்ஸின் மாற்றுத்திறனாளி குழுவினர்! போட்டோஸ்!
தர்ஷனா ஒரு பல் மருத்துவர் ஆவர். இவரை போலவே இவரது கணவரும் ஒரு பல் மருத்துவர் என கூறப்படுத்திகிறது. கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோரும் இவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்ட இவர்களின் திருமணம் ஜாம் ஜாம் என நடந்து முடிந்துள்ளது.
தர்ஷனா ஒரு மருத்துவராக இருந்தும், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாகவே நடிக்க துவங்கினார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் அவர் முழுமையாக கணவருடன் சேர்ந்து பல் மருத்துவ துறையில் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது. இவரது திருமணத்தில் சின்னத்திரையை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு, வாழ்த்தியுள்ளனர்.