அக்கா பவதாரிணியுடன் பார்ட்டி செய்த மறக்க முடியாத நினைவுகள்..! யுவன் பகிர்ந்த பழைய புகைப்படம்!
சகோதரி பவதாரிணி மற்றும் தன்னுடைய மகளுடன் பார்ட்டி செய்த போது, எடுத்த பழைய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
Singer Bhavatharini
இசைஞானி இளையராஜாவின் ஒரே மகளான பவதாரிணி கடந்த மாதம், புற்று நோய் காரணமாக உயிரிழந்தார். இவருக்கு புற்றுநோய் இருப்பது 4-ஆவது ஸ்டேஜில் தான் கண்டு பிடிக்கப்பட்டது. எனவே ஆயுர்வேத முறையில் சிகிச்சை எடுக்க இலங்கை சென்றபோது... அங்கு சிகிச்சை துவங்கிய சில தினங்களிலேயே பவதாரிணியின் உயிர் பிரிந்தது.
இந்த சம்பவம் இளையராஜாவின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பவதாரிணியின் இழப்பு மிகப்பெரிய வலியை கொடுத்தது. அம்மா செல்லமான யுவன் ஷங்கர் ராஜா, கடந்த சில வருடங்களுக்கு முன்பு தாயை இழந்த நிலையில்... தற்போது தாய் ஸ்தானத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜாவை பார்த்து கொண்டவர் அக்கா பவதாரிணி தான்.
பாவதாரிணியின் இழப்பில் இருந்து இன்னும் வெளியே வராத அவரது சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அடிக்கடி, பவதாரிணியின் புகைப்படத்தை வெளியிட்டு, மறக்கமுடியாத நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். சமீபத்தில் வெங்கட் பிரபு பவதாரிணியுடன் எடுத்த கடைசி புகைப்படத்தை வெளியிட்டு உருகி இருந்தார்.
இதை தொடந்து சற்று முன், இசையமைப்பாளரும்... பவதாரிணியின் உடன்பிறந்த சகோதரனுமான, யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய சகோதரியுடன் மகள் பிறந்தநாள் பார்ட்டியை என்ஜாய் செய்த மொமெண்ட்டின் புகைப்படத்தை வெளியிட்டு, மூன்று பேர் பார்ட்டி, பழைய புகைப்படம் என தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலர் மிஸ் யூ பவதாரிணி என கமெண்ட் செய்து வருவது மட்டும் இன்றி யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.