ஜனவரி மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!
ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இந்த மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு 10ம் தேதியை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Tamilnadu government
மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இதற்காக தமிழக அரசு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 60 லட்சம் பேர் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டனர்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01h5bsr742k92k7yvdyjjgm9tt/1000-rupees-scheme-1_300x169xt.jpg)
Magalir urimai thogai
இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களில் சுமார் 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு அவர்களுக்கும் நவம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க;- Pongal Gift : பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய் யார்.? யாருக்கு கிடைக்கும்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
kalaignar urimai thogai thittam
விண்ணப்பித்து இதுவரை மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களின் விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதிவாய்ந்த மகளிருக்கு இந்த மாதம் முதலே உரிமைத் தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இம்மாதம் பொங்கல் பண்டிகை 14ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் முன்கூட்டியை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் குடும்ப தலைவிகள் இருந்து வந்தனர்.
இதையும் படிங்க;- பள்ளி மாணவர்களுக்கு ஷாக்.! 4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்- பள்ளிக்கல்வித்துறை அதிரடி
CM Stalin
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு ஜனவரி 10ம் தேதியே வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.