படம் சரியா போகல.. நஷ்டத்தை ஈடுகட்ட பாதி சம்பளத்தை திருப்பி கொடுத்த விஜய்.. எந்த படம் தெரியுமா?
தலைவா படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட விஜய் தனது சம்பளத்தில் பாதியை திருப்பி கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சதிரமாக இருக்கும் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். விஜய்க்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் அரசியல் வருகை ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலும், அவர் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hnmfbwepva8db9txg1j2vbhr/Thalapathy-Vijay-1706862965206_300x169xt.jpg)
விஜய் தனது திரை வாழ்க்கையில் பல மெகா ஹிட் படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் இடை இடையே சில தோல்வி படங்களை விஜய் கொடுத்துள்ளார்.
அந்த வகையில் 2013-ம் ஆண்டு வெளியான தலைவா படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. ஏ.எல். விஜய் இயக்கிய இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். ஒரு சாதாரண இளைஞர் எப்படி புரட்சிகர தலைவராக மாறுவதை மையமாக கொண்டு இந்த படம் உருவானது.
ஆனால் இந்த படத்தின் டைட்டிலும், Time to Lead என்ற டேக் லைனும் படத்திற்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்தது. இதனால் இந்த படத்தை வெளியிட அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தடை விதித்தது. பின்னர் தலைவா படத்தின் டேக் லைனும், சில காட்சிகளும் நீக்கப்பட்ட பின் படத்தை வெளியிட அரசு அனுமதி வழங்கியது.
Thalapathy vijay
தாமதமாக வெளியான தலைவா படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இது பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் எதிரொலித்தது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர்களும் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் இந்த நஷ்டத்தை ஈடு செய்ய விஜய் தனது பாதி சம்பளத்தை திருப்பி கொடுத்ததுவிட்டாராம்.
சமீபத்தில் இதுகுறித்து தயாரிப்பாளர் ரமேஷ், தலைவா படம் தயாரிப்பாளருக்கு லாபகரமான படமாக அமையவில்லை. இதை தெரிந்து கொண்ட விஜய் தனது சம்பளத்தில் 6 கோடியை தயாரிப்பாளருக்கு திருப்பி கொடுத்ததாக கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக விஜய் இதை செய்ததாகவும், விஜய்யின் அந்த நல்ல மனசை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும் விஜய்யால் யாரும் பாதிக்கப்பட்டதில்லை என்றும் கூறியுள்ளார்.