கணவர் மறைவுக்கு பின்... மொட்டை அடித்துக்கொண்டு ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறிய விஜய் - அஜித் பட நடிகை
தமிழில் விஜய், அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான டோலிவுட் நடிகை சுரேகா வாணி மொட்டை அடித்துள்ளார்.
ஆந்திராவை சேர்ந்தவரான சுரேகா வாணி தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழிலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன், விஜய் உடன் மெர்சல், அஜித்தின் விஸ்வாசம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். தற்போது தெலுங்கில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் நடிகை சுரேகா வாணி.
நடிகை சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த ஜோடிக்கு சுப்ரிதா என்கிற மகளும் உள்ளார். கணவர் மறைவுக்கு பின்னர் மகளுடன் தனியாக வசித்து வரும் சுரேகா வாணி, இன்ஸ்டாகிராமில் மகளுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு, அதிலும் டிரெண்டிங்கில் உள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சுரேகா வாணிக்கு அதில் ஏராளமான பாலோவர்களும் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... Vimal: விமல் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் 10 வருடத்திற்கு பின் உருவாகிறது! எந்த படம் தெரியுமா?
இதற்கிடையே 46 வயதாகும் சுரேகா வாணி, இரண்டாம் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அடிக்கடி டோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதுகுறித்து சுரேகா வாணி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வரும் சுரேகா வாணி, படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், அவர் தற்போது மொட்டைத் தலையுடன் இருக்கும் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதாயத்திரையாக சென்ற சுரேகா வாணி, அங்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி இருக்கிறார். அவர் மொட்டைத் தலையுடன் இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் சுரேகா வாணியா இது என ஆச்சர்யத்துடன் கேட்கும் அளவுக்கு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். நடிகை சுரேகா வாணி மொட்டைத் தலையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... டைட்டில் வின்னர் கனவோடு இருந்த போட்டியாளரை Mid Week எவிக்ஷனில் அலேக்கா தூக்கி வீட்டுக்கு அனுப்பிய பிக்பாஸ்