80களில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகைக்கு இப்படி ஒரு நோயா? அவங்களே சொன்ன உருக்கமான தகவல்..
தனக்கு இருந்த நினைவாற்றல் பிரச்சனை குறித்து நடிகை பானுப்ரியா மனம் திறந்து பேசி உள்ளார்.
80களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் பானுப்ரியா முக்கியமானவர். 1983-ம் ஆண்டு வெளியான மெல்ல பேசுங்கள் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கில் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01htjf7dfc33931wxhmt54vh1n/screenshot-2024-04-03-222652-png_300x171xt.jpg)
திரையில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வந்தார். தமிழ் தெலுங்கில் மட்டும் சுமார் 155 படங்களில் பானு ப்ரியா நடித்துள்ளார்.
தமிழில் ஆராரோ ஆரிராரோ, அழகன், சத்ரியன், கோபுர வாசலிலே, பிரம்மா என பல வெற்றி படங்களில் பானு ப்ரியா நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் சிறந்து விளங்கினார் பானுப்ரியா. மேலும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பல படங்களில் பணியாற்றி உள்ளார்
1998-ம் ஆண்டு ஆதர்ஷ் 1998 ஆம் ஆண்டு ஆதர்ஷ் கௌஷலை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால் பானு ப்ரியா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்ததாக கூறப்பட்டது.
இதனிடையே நடிகை பானுப்ரியாவுக்கு திடீரென நினைவாற்றல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தன்னால் எந்த விஷயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது என்று நடிகை பானுப்ரியாவே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
அந்த பேட்டியில் பேசிய அவர், “நான் செய்ய வேண்டிய விஷயங்களை என்னால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை; படப்பிடிப்பு தொடங்கிய பிறகு, நான் எனது வசங்களை மறந்துவிட்டேன். இதனால் படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கிவிடலாமா என்று கூட நினைத்தேன்.ஆனால் எனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். எனவே என் குழந்தையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருந்ததால் மீண்டும் நடிக்க வந்தேன். இது என் வாழ்வில் மோசமான காலக்கட்டம்.” என்று கூறினார்.
தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்வதாக வெளியான வதந்தி குறித்து பானுப்ரியா விளக்கமளித்தார்.இதுகுறித்து பேசிய அவர். “நானும் என் கணவரும் விவாகரத்து செய்யவில்லை. இதைப் பற்றி பல வதந்திகள் உள்ளன, ஆனால் என கணவர் இப்போது உயிருடன் இப்போது இல்லை என்பதால் நான் அவற்றைப் பற்றி பேச விரும்பவில்லை, ”என்று கூறினார்.
ஊடக வெளிச்சத்திலிருந்து விலகி வாழ்ந்து வருவதாக கூறிய பானுப்ரியா, வீட்டில் இருக்கவு, புத்தகங்களைப் படிக்கவும், இசையைக் கேட்கவும், தினசரி வேலைகளைச் செய்யவும் விரும்புவதாக கூறினார். பானுப்ரியாவின் மகள் அக்ஷயா தற்போது லண்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.