சுக்கிரன் பெயர்ச்சி 2024 : நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் மழையாக பெய்யும்..!
நாளை சுக்கிரன் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும். அந்த ராசிகள் யார் என்று பார்ப்போம்.
சுக்கிரன் அசுரர்களின் அதிபதியாக கருதப்படுகிறார். மேலும், ஆடம்பரம் அழகு செழிப்பு மற்றும் ஆகியவற்றின் காரணியாகவும் வீனஸ் கூறப்படுகிறது. இந்த சுக்கிர மாதம் ஒரு முறை தனது ராசியை மாற்றிக் கொண்டே இருப்பார். ஜோதிடத்தில், இவர் ரிஷப மற்றும் துலாம் ராசிக்கு அதிபதி ஆவார்.
தற்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறார். ஆனால், ஜூன் 12ஆம் தேதி, அதாவது நாளை மாலை 6.29 மணிக்கு மிதுன ராசியில் நுழைகிறார். அங்கு ஜூலை 7ஆம் தேதி அதிகாலை 4:30 மணி வரை இருப்பார். அதன் பிறகு கடகத்திற்கு நகரும். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் 12 ராசிகளை எப்படி பாதிக்கும் என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: சுக்கிரனின் சஞ்சரிப்பால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும். ஆற்றல் பெருகும். சமூக அந்தஸ்து கௌரவமும் உயரும். சாதாரண முயற்சிகளை மேற்கொண்டாலும் அதிக வெற்றி அடைவீர்கள். உத்திகள் மற்றும் திட்டங்களை ரகசியமாக வைத்துக் வைத்துக்கொண்டு வேலை செய்தால் அதிக வெற்றியை பெறுவீர்கள். மாணவர்கள் வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும்.
மிதுனம்: சுக்கிரனின் சஞ்சரிப்பால் எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மை உண்டாகும். அரசு துறைகளில் எதிர்பார்த்த வேலைகள் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியை பெறுவீர்கள். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு: சுக்கிரனின் சஞ்சரிப்பால் இந்த ராசிக்காரர்கள் அபரிதமான செல்வத்தை பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிட ஒரு வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சுக்கிரனின் அருளால் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். இது உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும்.