கோடையில் தயிர் உடனே புளிக்காமல் இருக்க நச்சுன்னு நாலு டிப்ஸ்!!
கோடையில் உங்கள் வீட்டில் இருக்கும் தயிர் உடனே புளிப்பாக மாறினால், அவற்றை தடுக்க நீங்கள் பின்பற்றக்கூடிய சில வழிமுறைகள் இங்கே உள்ளன.
கோடையில் தயிர் சாப்பிடுவது கிட்டத்தட்ட அனைவருக்கும் பிடிக்கும். ஏனெனில், இந்த சீசனில் தயிர் சாப்பிடுவது உடலுக்கும், வயிற்றுக்கும் குளிர்ச்சியை தருகிறது. இதனால் மக்கள் தயிரை பல வழிகளில் எடுத்துக் கொள்கிறார்கள்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hw4krwsv2bx1y8gfg5y12ngf/fotojet---2024-04-23t100447-303_300x393xt.jpg)
இந்த நாட்களில் கிட்டத்தட்ட எல்லாருடைய வீடுகளிலும் தயிர் செய்வார்கள். இருப்பினும், மிக அதிக வெப்பநிலை காரணமாக தயிர் உடனே புளித்துவிடும். எனவே, இவற்றை தடுக்க சில குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். அவை..
நீங்கள் வீட்டிலேயே தயிர் செய்து சேமித்து வைக்கிறீர்கள் என்றால் மண் பாத்திரத்தை பயன்படுத்துங்கள். ஏனெனில், அதிலிருந்து தண்ணீர் வராமல் தயிர் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் பல நாட்கள் தயிர் நன்றாக இருக்கும்.
தயிரை இரவு நேரம் உறைய வைத்தால் கெட்டியான தயிர் கிடைக்கும். அதே சமயம், பகலில் வைத்தாலோ கெட்டியாக கிடைக்காது. மோர் போல் இருக்கும். ஒருவேளை, நீங்கள் பகலில் வைத்தால் உடனே ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள் அப்போதுதான் புளிக்காது.
இதையும் படிங்க: கோடையில் தயிர் சாப்பிடுவது நல்லது தான்.. ஆனால் இவற்றுடன் சாப்பிட்டால் ஆபத்து!
அதுபோல, தயிரை சூடான இடத்தில் வைத்தால் உடனே புளித்து விடும். எனவே, தயிரே அறை வெப்பநிலையை விட சற்று குளிர்ச்சியான இடத்தில் வையுங்கள் அல்லது ஃப்ரிட்ஜில் வையுங்கள். மேலும், ஏசி இருக்கும் அறையில் கூட வைக்கலாம்.
இதையும் படிங்க: தயிர் தலைமுடிக்கு ஒரு வரப்பிரசாதம்... எப்படி தெரியுமா..??
தயிரை நீங்கள் மற்ற உணவு பொருட்களுடன் சேர்த்து வைத்தால் அது அவற்றின் வாசனையை உறிஞ்சி விரைவாக புளித்து விடும். எனவே, தயிரை பால் பொருட்கள் இருக்கும் இடத்தில் மட்டுமே வையுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D