அதிமுகவுக்கு சுக்கிர யோகம் அடிக்குமா? ஒரே வார்த்தையில் குருபெயர்ச்சி பலன் சொன்ன டிடிவி. தினகரன்!
எடப்பாடி பழனிச்சாமி என்ற தீயவர் ஒருவர் இருக்கும் வரை அதிமுகவிற்கு எந்த நல்லதும் நடப்பதாக எனக்கு தெரியவில்லை என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
Agneeswara Swamy Temple
நவகிரக கோயில்களில் ஒன்றானதாகவும் சுக்கிரன் பரிகார ஸ்தலமாகவும் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானதாகவும் விளங்கும் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கஞ்சனூர் அருள்மிகு கற்பகாம்பாள் அம்பிகை சமேத அக்னீஸ்வரர் திருக்கோயிலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அவரது மனைவி அனுராதா மற்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் ரங்கசாமி ஆகியோருடன் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
TTV Dhinakaran
கோயிலில் விளக்கேற்றி விநாயகர், முருகன், சுக்கிரன், அக்னீஸ்வரர், ஹரதத்தருக்கு காட்சியளித்த தட்சிணாமூர்த்தி, கற்பகாம்பாள், உள்ளிட்ட சன்னதிகள் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: குரு பெயர்ச்சி அரசியலில் யாருக்கு பெயர்ச்சியாகும் யாருக்கெல்லாம் என்று கேட்டதற்கு நான் ஜோசியம் சொல்ல முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் நான் உட்பட பெரும்பாலானோர் வெற்றி பெறுவார்கள்.
Edappadi Palanisamy
எடப்பாடி பழனிச்சாமி என்ற தீயவர் ஒருவர் இருக்கும் வரை அதிமுகவிற்கு எந்த நல்லதும் நடப்பதாக எனக்கு தெரியவில்லை. வரும் 2026ம் தேர்தல் மக்களை மையப்படுத்தி நல்லாட்சியை மையப்படுத்தி காமராஜர், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி அமையும். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேரடியாக சொல்ல வேண்டியது தலையைச் சுற்றி சொல்கிறார். ராணுவ துணை கொண்டு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது பிரதமருக்கும் தெரியும். மற்றவர்களுக்கும் புரியும். இது ஜனநாயக நாடு.
DMK Government
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் சொல்லி கர்நாடகாவில் ஆட்டம் போடும் முதல்வர் சித்தாராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோரிடம் ஜனநாயக முறைப்படி காவிரி நீர் தமிழகத்தின் ஜீவாதாரண பிரச்சனை. காவிரி நீர் தமிழக மக்களின் உரிமை. காவிரியின் குறுக்கே எந்த அணையும் கட்டக்கூடாது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க சோனியா காந்தி ஒரு அறிவிப்பு சொன்னாலே எல்லாம் நடந்துவிடும். தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை. அதேபோல் தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல். இல்லை மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது. தற்போது மின் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் குடிநீருக்கும், பயிர்களுக்கு பம்பு செட் இயக்கி தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Sekar Babu
அதிமுக ஆட்சிக்காலத்தை விட தற்போது திமுக ஆட்சியில் அதிக அளவில் கோயில்களில் கும்பாபிஷேகம் நடப்பதாக கூறுகிறார்களே? என்ற கேள்விக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு நல்ல பக்திமான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் அரசியல் கற்றவர். முன்பு அதிமுக இயக்கத்தைச் சேர்ந்தவர். அதனால் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். இன்று தனக்கு சுக்ர திசை என்பதால் குடும்பத்துடன் சுக்கிர தனமான கஞ்சனூர் கற்பகாம்பாள் சமேத அக்னீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்ததாக கூறினார்.