நாங்கள் என்ன இளிச்சவாயர்களா? பாஜகவுடன் கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணம்! திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு தகவல்
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதற்கு என்ன காரணம் என்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்
AIADMK Vs BJP
ஜெயலலிதா மறைவை அடுத்து பாஜகவுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை அதிமுக எதிர்கொண்டது. அவ்வப்போது இருதரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் இணைந்தே பயணித்து வந்தனர். இந்நிலையில், திடீரென தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அதிரடி அறிவிப்பை வெளியிட்டு பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவருகிறார்.
Dindigul Srinivasan
இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்;- எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை அண்ணாமலை அவதூறாக பேசி வந்தார். அண்ணாமலை தான் வருங்கால முதல்வர் என பாஜவினர் கூறி வந்ததை எங்களால் ஏற்க முடியவில்லை. இதுதொடர்பாக அக்கட்சி தலைமையிடம் முறையிட்டோம்.
இதையும் படிங்க: நீலகிரி மக்களவை தொகுதி.. ஆ.ராசாவை வீழ்த்த பாஜக தேசிய தலைமை களமிறக்கப்போகும் வேட்பாளர் யார் தெரியுமா?
Edappadi Palanisamy
அடுத்த முதல்வர் அவர்தான் என சொன்னால் நாங்கள் என்ன இளிச்சவாயர்களா? அண்ணாமலைதான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் எங்களை நிர்ப்பந்தம் செய்தனர். ஆகையால் அமித்ஷா, நட்டாவிடம் முறையிட்ட பின் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதையும் படிங்க: கண்டுகொள்ளாத கட்சிகள்.. வேறு வழியில்லாமல் ஜெயலலிதா பாணியில் 40 தொகுதியிலும் தனித்து களமிறங்கும் அதிமுக?
Annamalai
இனி பாஜவுடன் கூட்டணி இல்லை என்று அழுத்தம் திருத்தமாக எடப்பாடி பழனிச்சாமி கூறிவிட்டார். பழநிக்கு கூட காவடி தூக்குவோம். ஆனால் அண்ணாமலைக்கு நாங்கள் காவடி தூக்க முடியாது என பேசியுள்ளார்.