Sani Peyarchi 2022: இன்று சனியின் பிற்போக்கு நகர்வு...இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்...வாழ்வில் தொட்டது துலங்கும்
Sani Peyarchi 2022 Palangal: ஜூன் 12 அதாவது இன்று வக்ரமாகியுள்ள அல்லது பிற்போக்கு நகர்வைத் தொடங்கியுள்ள சனி குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு திடீர் பண மழையை பொழிய இருக்கிறார். அப்படி, யாருக்கு என்னென்ன பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
Sani Peyarchi 2022
ஜூலை 12-ம் தேதி சனியின் பிற்போக்கு நகர்வு:
ஜோதிடத்தின் படி, ஒன்பது கிரகங்களில் சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக பார்க்கபப்டுகிறார். சனி பகவான் கர்மாவின் கிரகமாக கருதப்படுகிறார். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் நமக்கு பலன்களை அளிக்கின்றார்.
சனி தேவன் ஜூலை 12-ம் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். அதன்படி, சனி தற்போது கும்பத்தில் இருந்து மகரத்திற்கு வக்ர நிலையில் இருக்கும் , இது 12 ராசிகளையும் பாதிக்கும். சனி பகவான் இந்த நகர்வு, 2024 வரை குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு சமூக, பொருளாதார, குடும்ப வாழ்க்கை என அனைத்து துறைகளிலும் சனியின் ஆசிர்வாதம் கிடைக்கும். அப்படி, சனி பகவானின் நேரடி அருள் பெறும் ராசிகள் என்னென்னெ என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
Sani Peyarchi 2022
மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்க்ளுக்கு சனியின் சஞ்சாரம் சிறப்பான பலன்களைத் தரும். திடீர் பண வரவு அதிகமாகும். வாழ்வில் புது ஒளி பிறக்கும். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். இந்த நேரத்தில் நினைத்த காரியம் நிறைவேறும்.வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.
Sani Peyarchi 2022
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு 2024 வரை சனிபகவானின் சிறப்பு அருள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, மரியாதை, கௌரவம் என அனைத்தும் கிடைக்கும். தொழிலதிபர்களும் நிதி ஆதாயங்களைப் பெறலாம். வாழ்வில் அதிக பாராட்டுகளும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். பண வரவு அதிகரித்து காணப்படும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.
Sani Peyarchi 2022
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் பிற்போக்கு நகர்வு வரப்பிரசாதமாக அமையும். உங்கள் வலிமை, தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். பண ஆதாயம் அதிகரிக்கும். பணியிடத்தில் உரிய மரியாதை பெறுவீர்கள். வியாபாரிகளின் வருமானம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களிடமிருந்து அனுகூலமான பலன் கிடைக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும்.