தெலங்கானா தேர்தல்: பாஜக உடன் கூட்டணி... பந்தாடப்பட்ட பவன் கல்யாண் - போட்டியிட்ட இடமெல்லாம் டெபாசிட் இழப்பு
தெலங்கானா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழந்துள்ளது.
Pawan Kalyan
ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்னர் அங்கு இதுவரை நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் கே.சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி தான் வெற்றிபெற்று ஆட்சி செய்து வந்தது. இதனால் மூன்றாவது முறையாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்கும் முனைப்போடு பிஆர்எஸ் கட்சி களமிறங்கியது. இதற்கு போட்டியாக காங்கிரஸ் மற்றும் பாஜக களமிறங்கியது. இதனால் மும்முனைப்போட்டி நிலவியது.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01dbjk17t3dv4asntvzpa4sq6n/Election-results-2019_300x180xt.jpg)
jana sena party
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பிஆர்எஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி தான் இந்த முறை அங்கு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மறுபுறம் இந்த இருகட்சிகளுக்கு எதிராக போட்டியிட்ட பாஜகவும் படுதோல்வியை சந்தித்து உள்ளது. இதன்மூலம் தென் மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற பாஜகவின் கனவு மீண்டும் ஒரு முறை தகர்ந்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Jana Sena Pawan Kalyan
இந்த தேர்தலில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி, பாஜக-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் ஜன சேனா கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்கிற முனைப்போடு தீவிரமாக பிரச்சாரமும் மேற்கொண்டார் பவன் கல்யாண். ஆனால் அந்த 8 தொகுதிகளிலும் ஜன சேனா கட்சி படுதோல்வியை சந்தித்து உள்ளது.
telangana election result
இதில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால் ஜன சேனா கட்சி போட்டியிட்ட 8 தொகுதியிலும் டெபாசிட் இழந்துள்ளது. இதன்மூலம் தெலங்கானாவில் அக்கட்சி படுதோல்வியை சந்தித்து உள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் அக்கட்சிக்கு இணையாக நோட்டாவுக்கும் வாக்குகள் பதிவாகி இருந்ததை குறிப்பிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... தெலங்கானா தேர்தல் முடிவுகள்: அதே காட்சிகள்... அதீத நம்பிக்கையின் தோல்வியா?