Suriya 41: சூர்யா 41 படத்தின் சூப்பர் அப்டேட்...நடுக்கடலில் ஷுட்டிங்..! பாலாவின் வேற லெவல் சரவெடி ஆரம்பம்..
Suriya 41: சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா மற்றும் பாலா மீண்டும் இணைந்துள்ள சூர்யா 41 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
Suriya 41:
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களும் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்று தந்தது.
Suriya 41:
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நல்ல படைத்தது.
Suriya 41:
இதையடுத்து, சூர்யா இயக்குனர் பாலா உடன் 18 ஆண்டுகள் கழித்து கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
suriya 41
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா ஏற்கனவே நந்தா, பிதாமகன் என 2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ளதால், இதனால் சூர்யா 41 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
suriya 41
சூர்யா 41 படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் கன்னியாகுமரியில் பூஜையுடன் துவங்கியது. மீனவர்களின் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்கப்படும், இந்த படத்தில் சூர்யா, வாய் பேச முடியாத, காது கேட்காத மீனவர் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.
suriya 41
சூர்யா 41 படத்திற்காக மூன்று வீடுகள் தேவை என்பதால் கன்னியாகுமரியில் 3 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாம். இந்த வீடுகளில் தான் தற்போது ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், படப்பிடிப்பு முடிந்தவுடன் வீடு இல்லாமல் இருக்கும் மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஏழைகளுக்கே இந்த வீடுகளை கொடுக்க சூர்யா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Suriya 41:
சூர்யா 41 படப்பிடிப்பின் லேட்டஸ்ட் தகவலின் படி, கன்னியாகுமரியை ஒட்டிய கடல் பகுதியில், நடுக்கடலில் ஷுட்டிங் தற்போது நடத்தப்பட்டு வருகிறதாம். இதில், வெளிநாட்டினர்சிலரும் இருக்கிறார்களாம். மேலும், இந்த திரைப்படம் வழக்கமாக பாலா படத்தின் பாணியில் இல்லாமல், முழுக்க முழுக்க வித்தியாசமான கதை, வித்தியாசமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Suriya 41:
மேலும், பாலா மே மாத இறுதிக்குள் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதனால், ஆயுத பூஜை விடுமுறை சமயத்தில் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.